எங்கள் குடும்பம் வெளிப்படையானது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக தேசியசெயற்குழு கூட்டம் கடந்த சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு முக்கியபிரமுகர்கள் ஹைதராபாத் வந்திருந்தனர்.

இரண்டு நாள் நடைபெற்ற பாஜக தேசியசெயற்குழு கூட்டத்தில் தென் மாநிலங்களில் கட்சியை வளர்ப்பதை குறிவைத்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது. தென்மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சி நடந்துவருகிறது. தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவை பெரும்சக்தியாக மாற்ற முக்கிய யூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தை நோட்டமிட்டு அங்கு புகைப்படங்களை எடுத்த தெலங்கானா மாநில உளவுத்துறை அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதை மத்தியஅமைச்சர் கிஷன் ரெட்டியும் உறுதிபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், எங்கள் கட்சியில் எந்த ரகசியமும் இல்லை. நாங்கள் ஜனநாயகப்பூர்வமான கட்சி. இதுஒன்றும் குடும்ப கட்சி அல்ல. இந்த சூழலில் அத்துமீறி எங்கள் கூட்டத்தில் அந்த நபர் நுழைந்துள்ளார். இருந்தாலும் எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும்இல்லை. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்விற்கு தேவைப் பட்டால் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை அனுப்பி வைக்கிறோம். ஆனால், கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே அதைநோட்டமிடுவது தவறானது என்றார்.இந்த சம்பவம் தொடர்பாக மத்தியஅமைச்சர் பியூஷ் கோயலும், எங்கள் குடும்பம் வெளிப்படையானது. எனவே, எங்கள் நடவடிக்கையில் எந்தரகசியமும் இல்லை என்றுள்ளார். முன்னதாக கடந்த சனிக்கிழமை ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...