இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எவரும் செய்யாத வகையில் எனது 13 ஆண்டுகால வங்கிக் கணக்கு, நிதிவிவரங்களை வெளியிட உள்ளேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
தமிழகத்தில் ஜன சங்கத்தின் முதல்தலைவர் கிறிஸ்தவரான வி.கே ஜான் என்பவர்தான், எமர்ஜென்சி காலத்தில் secular (மதசார்பின்மை ) என்ற வார்த்தையை புதிதாக கொண்டுவந்தார். அதன் பிறகு எது secular என்பதில் குழப்பம் விளைவித்தனர். அவரவர் மதவழக்கத்தை, பாரம்பரியத்தை பின்பற்றுவதே மதசார்பின்மை. இப்தார் போன்ற விருந்தில் ஓட்டுக்காகவும், போட்டோவுக்காகவும் பங்கேற்கதொடங்கிய பிறகுதான் இந்தியாவில் மதத்தை வைத்து அரசியல்செய்வது தொடங்கியது. இப்தாரில் நானும் கலந்து கொண்டேன். ஆனால் ஓட்டுக்காக நான் நடிக்கவில்லை.
இங்கிருக்கும் சிலருக்கு புரிதல்இல்லை. புத்தகம் படிப்பதில்லை. உலகில் நடக்கும் எதையும் அவர்கள் தெரிந்துகொள்வதில்லை. கும்மிடிப்பூண்டிக்கும் சென்னைக்கும் இடையில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசுகின்றனர். பாஜக குறித்து சொல்லப்பட்ட ஒவ்வொரு பொய்களையும் களை எடுத்து வருகின்றோம். 2024இல் மிகப்பெரிய தாக்கத்தை தமிழகத்தில் பாஜக ஏற்படுத்தும். நான் கவுன்சிலரோ, ஊராட்சிமன்ற தலைவரோ, சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லை. அரசுபணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தற்போது வருமானம் பெறவில்லை. ஆனாலும் என்னிடம் திமுக ஒருகேள்வி கேட்டுள்ளது.
திமுகவினர் எனது உடைகள், கடிகாரம், கார்குறித்து கேள்வி கேட்பதை வரவேற்கிறேன். இதற்காகத்தான் ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கிறேன். இந்திய அரசியலில் யாரும்செய்யாததை ஒருமாநிலத் தலைவராக நான் செய்ய உள்ளேன். தமிழகம் முழுவதும் விரைவில் பாஜக சார்பாக நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். 234 தொகுதிகளுக்கும் நடந்துசென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கோயில்களுக்கும் செல்லஉள்ளேன். எனது நடை பயணத்தை தொடங்கும்போது, நான் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான 2010 – 11ஆம் ஆண்டு முதல் எனது வங்கிக்கணக்கு நிதி விவரங்களை, மக்களுக்கு சமர்ப்பிக்க உள்ளேன்.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |