நிடி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர் வராததற்கு பயமே காரணம்-அண்ணாமலை

“முதல்வர் ஸ்டாலின், பயம் காரணமாக தான் நிடி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை,” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி எழுதிய, ‘கனெக்டிங் 1.4 பில்லியன்’ நுால் வெளியீட்டு விழா, சென்னை தி.நகர் கமலாலயத்தில் நடந்தது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நுாலை வெளியிட, ‘அன்பு பாலம்’ நிறுவனர் கல்யாணசுந்தரம் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய ஜனநாய கட்சி தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணாமலை பேசியதாவது:

பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், தொழில்நுட்பம் இருவரிடமும் இருக்கும் என்ற நிலை, இந்தியாவில் தான் உள்ளது.

நுாலில், பிரதமர் மோடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச கழிப்பறை திட்டம், குடிநீர் திட்டம் என, பல இடம் பெற்றுள்ளன. குழாயில் பாதுகாப்பாக குடிநீர் வழங்குவதால், ஆண்டுக்கு, 2 வயதுக்கு கீழ், 1.36 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

இன்று புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞர்களுக்கு, 40 வினாடிக்குள் ஒரு தகவலை கொடுத்தால் தான் அவர்களால் கிரகிக்க முடியும். பா.ஜ.,வில் உள்ள இளைஞர்கள் புத்தகம் எழுத வேண்டும்; அதை கட்சி ஊக்குவிக்கும்.

தமிழகத்தில் பா.ஜ., எழுத்தாளர்கள் அதிகம் வர வேண்டும். திராவிட கட்சிகளில் எழுத்தாளர்கள் அதிகம் உள்ளனர். அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால், பா.ஜ.,வில் எழுத்தாளர்கள் வர வேண்டும்.

பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இல்லை என்பதால், நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், 2022, 2023, 2024 என, நிடி ஆயோக் மூன்று கூட்டங்களுக்கு செல்லவில்லை.

நிடி ஆயோக் கூட்டத்திற்கு சென்றால், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பேச வேண்டும். பயம் காரணமாக தான் கூட்டத்திற்கு அவர் செல்லவில்லை. அந்த இடத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். முதல்வரின் நாடகத்தை மக்கள் நன்றாக பார்த்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...