‘சில அரசியல் கட்சிகள் இன்னும் நம் நாட்டை மொழியின் அடிப்படையில் பிரிக்க விரும்புகின்றன’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். அவர், பிரயாக்ராஜில் நிருபர்கள் சந்திப்பில், தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பது தொடர்பாக அண்ணாமலை கடுமையாக சாடி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: சில அரசியல் கட்சிகள் இன்னும் நம் நாட்டை மொழியின் அடிப்படையில் பிரிக்க விரும்புகின்றன. தாய்மொழி அனைவருக்கும் முக்கியம்.
10க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக்கொண்ட பிறகும், மகாகவி பாரதி தமிழை சிறந்த மொழி என்று அழைத்தார். எனவே மக்கள் அதிக மொழிகளைப் படிக்க வேண்டும்.
தேசிய கல்வி கொள்கை ஒரு இந்திய மொழியைப் படிப்பதை வலியுறுத்துகிறது. அது எந்த மொழியாகவும் இருக்கலாம். தமிழகத்தில், மாணவர்கள் தங்கள் விரும்பும் மொழியை படிக்கலாம். அரசியல் கட்சிகள் தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |