மக்களுக்கு சேவை செய்வதற்கான அனைத்தையும் செய்ய வேண்டும்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, ஒன்பது மாநிலங்களில் சட்ட சபைத் தேர்தல் நடக்க விருக்கிறது. இந்நிலையில், அதற்கான வேலைகளை ஏற்கெனவே பாஜக தொடங்கிவிட்டது. அதன் முன்னேற்பாடாக பா.ஜ.க-வின் இரண்டு நாள் தேசியசெயற்குழுக் கூட்டம் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இதில், கர்நாடக சட்ட சபைத் தேர்தல் உட்பட வரும் நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்கப் பட்டன.

அதில், 2024 -ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வின் திட்டம் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், “பிரதமர் மோடி இந்தக்கூட்டத்தின் மூலம் நம்மிடம் பல செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார். அதில் குறிப்பிடத் தக்கவற்றில் சிலவற்றை கவனப் படுத்துகிறேன்.

நம்மிடம் 400 நாள்கள் இருக்கின்றன. மக்களுக்கு சேவைசெய்வதற்கான அனைத்தையும் செய்யவேண்டும். சரித்திரம் படைக்க வேண்டும். 18-25 வயதுக்குட்பட்டவர்கள் மீது நமது கவனத்தை முழுமையாகச் செலுத்தவேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு சரித்திரமோ, முந்தைய அரசுகளின் தவறான நிர்வாகம் பற்றிய தகவல்களோ அல்லது நாம் எப்படி நல்லாட்சியை நோக்கிநகர்கிறோம் என்பது பற்றிய செய்திகளோ பரிச்சயமிருக்காது.

நாம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஜனநாயக வழிகளை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், நல்லாட்சியின் ஒருபகுதியாக இருக்க அவர்களுக்கு உதவவேண்டும். எல்லைப் பகுதிகள் உட்பட கிராமங்களின் அமைப்பை வலுப்படுத்துவதில் கட்சி கவனம் செலுத்த வேண்டும். அதன் தலைவர்கள் எல்லாத்தரப்பு மக்களையும் சந்திக்க வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினரான போஹ்ராக்கள், பாஸ்மந்தாக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் தேர்தலைக் கருத்தில் கொள்ளாமல் அணுக வேண்டும்.

பா.ஜ.க இனி ஓர்அரசியல் இயக்கம் மட்டுமல்ல, சமூக-பொருளாதார நிலைமைகளை மாற்றும் ஒருசமூக இயக்கம். இந்தியாவின் சிறந்த சகாப்தம் வரவிருக்கிறது. அதன் வளர்ச்சிக்காக நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார். இதை கவனத்தில் கொள்ளுங்கள்” எனப் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ ...

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு , பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,யை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் ...

திமுக அரசு மீது அமைச்சர்களும் அ ...

திமுக அரசு மீது அமைச்சர்களும் அதிருப்தி – வானதி சீனிவாசன் பேட்டி ''தி.மு.க., அரசு மீது மக்கள் மட்டுமல்ல; அமைச்சர்களும் அதிருப்தி ...

நெசவாளர்களுக்கு திமுக அளித்த வ ...

நெசவாளர்களுக்கு திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் 'தமிழக நெசவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, தி.மு.க., உடனே நிறைவேற்ற ...

இரு நாள் பயணமாக சவூதி அரேபியா ப ...

இரு நாள் பயணமாக சவூதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி டில்லி இருந்து ...

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச ...

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்! எரிசக்தி, ராணுவ ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை அரசு முறை பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ...

1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உரு ...

1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் கொள்கை முடிவுகளை எடுக்கிறோம் – பிரதமர் மோடி ''அடுத்த, 1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் வகையிலான, நிர்வாக ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...