மக்களுக்கு சேவை செய்வதற்கான அனைத்தையும் செய்ய வேண்டும்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, ஒன்பது மாநிலங்களில் சட்ட சபைத் தேர்தல் நடக்க விருக்கிறது. இந்நிலையில், அதற்கான வேலைகளை ஏற்கெனவே பாஜக தொடங்கிவிட்டது. அதன் முன்னேற்பாடாக பா.ஜ.க-வின் இரண்டு நாள் தேசியசெயற்குழுக் கூட்டம் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இதில், கர்நாடக சட்ட சபைத் தேர்தல் உட்பட வரும் நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்கப் பட்டன.

அதில், 2024 -ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வின் திட்டம் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், “பிரதமர் மோடி இந்தக்கூட்டத்தின் மூலம் நம்மிடம் பல செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார். அதில் குறிப்பிடத் தக்கவற்றில் சிலவற்றை கவனப் படுத்துகிறேன்.

நம்மிடம் 400 நாள்கள் இருக்கின்றன. மக்களுக்கு சேவைசெய்வதற்கான அனைத்தையும் செய்யவேண்டும். சரித்திரம் படைக்க வேண்டும். 18-25 வயதுக்குட்பட்டவர்கள் மீது நமது கவனத்தை முழுமையாகச் செலுத்தவேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு சரித்திரமோ, முந்தைய அரசுகளின் தவறான நிர்வாகம் பற்றிய தகவல்களோ அல்லது நாம் எப்படி நல்லாட்சியை நோக்கிநகர்கிறோம் என்பது பற்றிய செய்திகளோ பரிச்சயமிருக்காது.

நாம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஜனநாயக வழிகளை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், நல்லாட்சியின் ஒருபகுதியாக இருக்க அவர்களுக்கு உதவவேண்டும். எல்லைப் பகுதிகள் உட்பட கிராமங்களின் அமைப்பை வலுப்படுத்துவதில் கட்சி கவனம் செலுத்த வேண்டும். அதன் தலைவர்கள் எல்லாத்தரப்பு மக்களையும் சந்திக்க வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினரான போஹ்ராக்கள், பாஸ்மந்தாக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் தேர்தலைக் கருத்தில் கொள்ளாமல் அணுக வேண்டும்.

பா.ஜ.க இனி ஓர்அரசியல் இயக்கம் மட்டுமல்ல, சமூக-பொருளாதார நிலைமைகளை மாற்றும் ஒருசமூக இயக்கம். இந்தியாவின் சிறந்த சகாப்தம் வரவிருக்கிறது. அதன் வளர்ச்சிக்காக நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார். இதை கவனத்தில் கொள்ளுங்கள்” எனப் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...