நாடாளுமன்றத் தேர்தல் கட்சித்தலைமை சொன்னால் போட்டியிடுவேன்

நாடாளுமன்றத் தேர்தலில் கட்சித்தலைமை எந்ததொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாக்குசதவிகிதம் அதிகம் உள்ள 5 தொகுதிகளை அக்கட்சி மேலிடம் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில், ஒருதொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை களம்இறக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்குறுதி தயாரிப்புகுறித்து கருத்து கேட்புக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளீர்களா என்றகேள்வி எழுப்பப்பட்டது. அதற்குபதிலளித்த அவர், கட்சித் தலைமை தன்னை எந்தஇடத்தில், எந்ததொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என்றார். அதேவேளையில், பிரசாரம் மேற்கொள்ள சொன்னால் பிரசாரம் செய்வேன். ஆனால் தன்னை பொறுத்தவரை சொந்தவிருப்பம் என்று எதுவும் கிடையாது என கூறினார்.

மேலும், இன்னும் 60 நாட்களுக்கு தன்னை எப்படி பயன் படுத்த வேண்டும் என்பது கட்சியின் தலைமைக்கு தெரியும். அந்த அடிப்படையில்தான் செயல்படுவேன். மத்திய அமைச்சர்களை போட்டியிட வைத்து ஜெயிக்க வைக்க தயாரா என்று அதிமுகவின் கே.பி.முனுசாமி விடுத்த சவால் குறித்தும் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் பதில் அளித்த அண்ணாமலை, ஏன் மத்திய அமைச்சர்களை போட்டியிட வைக்கவேண்டும். சாதாரண கிளை நிர்வாகியை கூட கட்சி போட்டியிட வைக்கும். மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒருதோல்வியடைந்த நடிகர் என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார். அவரது தந்தை பேரையும், தாத்தா பெயரையும் எடுத்துவிட்டால் உதயநிதிக்கு எந்த முகவரியும் இல்லை என்று விமர்சித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாக்., ஆதரவு தேசவிரோதிகள் 43 பேர் ...

பாக்., ஆதரவு தேசவிரோதிகள் 43 பேர்  கைது இந்திய மண்ணில் இருந்துகொண்டு பாக்.,கிற்கு ஆதரவுதெரிவித்த தேசவிரோதிகள் 43 ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...