நாடாளுமன்றத் தேர்தல் கட்சித்தலைமை சொன்னால் போட்டியிடுவேன்

நாடாளுமன்றத் தேர்தலில் கட்சித்தலைமை எந்ததொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாக்குசதவிகிதம் அதிகம் உள்ள 5 தொகுதிகளை அக்கட்சி மேலிடம் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில், ஒருதொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை களம்இறக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்குறுதி தயாரிப்புகுறித்து கருத்து கேட்புக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளீர்களா என்றகேள்வி எழுப்பப்பட்டது. அதற்குபதிலளித்த அவர், கட்சித் தலைமை தன்னை எந்தஇடத்தில், எந்ததொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என்றார். அதேவேளையில், பிரசாரம் மேற்கொள்ள சொன்னால் பிரசாரம் செய்வேன். ஆனால் தன்னை பொறுத்தவரை சொந்தவிருப்பம் என்று எதுவும் கிடையாது என கூறினார்.

மேலும், இன்னும் 60 நாட்களுக்கு தன்னை எப்படி பயன் படுத்த வேண்டும் என்பது கட்சியின் தலைமைக்கு தெரியும். அந்த அடிப்படையில்தான் செயல்படுவேன். மத்திய அமைச்சர்களை போட்டியிட வைத்து ஜெயிக்க வைக்க தயாரா என்று அதிமுகவின் கே.பி.முனுசாமி விடுத்த சவால் குறித்தும் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் பதில் அளித்த அண்ணாமலை, ஏன் மத்திய அமைச்சர்களை போட்டியிட வைக்கவேண்டும். சாதாரண கிளை நிர்வாகியை கூட கட்சி போட்டியிட வைக்கும். மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒருதோல்வியடைந்த நடிகர் என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார். அவரது தந்தை பேரையும், தாத்தா பெயரையும் எடுத்துவிட்டால் உதயநிதிக்கு எந்த முகவரியும் இல்லை என்று விமர்சித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...