ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை

பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன்படி ஆவணபட வீடியோக்கள், கருத்துகளை நீக்க சமூக வலைதளங்களுக்கு மத்தியஅரசு உத்தரவிட்டிருக்கிறது. இதை ட்விட்டர், யூடியூப் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு வீடியோ, பதிவுகளை நீக்கி வருகின்றன.

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்தமாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்தகலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா – மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்தஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிபிசியின் ஆவண படத்தை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு கடந்த 18-ம் தேதி தடை விதித்தது. இந்த சூழலில் பிபிசி ஆவண படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதோடு பிபிசி ஆவண படத்துக்கான இணைப்பும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. இத்தகைய சமூக வலைதள பதிவுகளுக்கு மத்திய அரசு தற்போது தடைவிதித்துள்ளது. ட்விட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் அரசின் உத்தரவை ஏற்று வீடியோக்கள், பதிவுகளை நீக்கிவருகின்றன. ட்விட்டரில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிபிசி ஆவணபடம் வெளியாக ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆவணபடம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. இவை நாட்டின் ஒருமைப் பாட்டை சீர்குலைக்கும் வகையில் உள்ளன.

எனவே ஆவணபடம் தொடர்பான கருத்துகளை நீக்க யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கண்டிப்புடன் உத்தரவிடப் பட்டு இருக்கிறது. பிபிசி ஆவண படத்துக்கான இணைப்புகளை நீக்கவும் அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவண படத்தின் 2-ம் பாகம் வரும் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி, பிரதமர் மோடி உட்பட வெளிநாட்டு தலைவர்கள் குறித்து ஆவண படம் வெளியிட தேவையில்லை. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் உட்பட சொந்த நாட்டின் தலைவர்கள் குறித்த ஆவண படங்களை வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நடுநிலையாளர்கள் விமர்சித்து உள்ளனர்.

பி.பி.சி-ஐத் தாக்கிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்தியாவில் உள்ள ஒவ்வொருசமூகமும் பிரதமர் மோடியின் தலைமையில் முன்னேறி வருவதாக கூறினார். “சிறுபான்மையினர், அல்லது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சமூகமும் நேர்மறையாக முன்னேறி வருகிறது. இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் தொடங்கப் படும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களால் இந்தியாவின் பிம்பத்தை இழிவுபடுத்தமுடியாது. பிரதமர் நரேந்திர மோடி (@narendramodi) ஜியின் குரல் 1.4 பில்லியன் இந்தியர்களின் குரல்” என்று அவர் சனிக்கிழமை ட்விட்டரில் எழுதினார்.

மும்பை பா.ஜ.க தலைவர் ஆஷிஷ் ஷெலர், பி.பி.சி மூலம் மோடியை அவதூறாகப்பேச முயற்சிகள் நடப்பதாக கூறியிருந்தார். “ஏற்கனவே உலக அளவில் பாராட்டைப்பெற்றுள்ள நமது பிரதமரைப் பற்றிய இத்தகைய ஆவணப்படத்தை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்,” குஜராத்தில் அவர் முதலமைச்சராக இருந்தபோது நடந்த வகுப்புவாதகலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இரண்டு தசாப்தங்களாக அவதூறு செய்து வந்தன,”

“எதிர்க்கட்சிகள் விழுந்து விட்டது… இப்போது, ​​பி.பி.சி மூலம் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறு செய்ய முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றன,” என்று அவர் கூறினார்.‛‛குஜராத் கலவரம் தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்தபகுதியில் அநீதி நடந்தாலும் அதை தட்டிக் கேட்போம். ஆனால் மரியாதைக்குரிய ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது. இதனை நான் ஒப்புக்கொள்ளவில்லை” என்றார். இதன்மூலம் பிரதமர் மோடிக்கு ஆதரவாக ரிஷி சுனக் பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

புதல்வருக்கு மட்டுமே முதல்வர் � ...

புதல்வருக்கு மட்டுமே முதல்வர் கனவு இருக்க வேண்டுமா – தமிழிசை கேள்வி வைகோ போன்றோர் ஈழப் பிரச்னை நடந்தபோது ஒரு மாதிரி ...

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் � ...

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ''ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை'' என்று மத்திய அமைச்சர் ...

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணை� ...

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணையை சுக்குநூறாக்கியது இந்தியா பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா ...

பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப ...

பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு டில்லியில் பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் ...

மிகவும் துல்லியமான தாக்குதல் R ...

மிகவும் துல்லியமான தாக்குதல் – சசி தரூர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் கூடாரங்களை தாக்கி ...

பயங்கரவாதிகளின் முகாம்களை நிர� ...

பயங்கரவாதிகளின் முகாம்களை நிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பயங்கரவாதிகளின்முகாம்களைநிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...