மருத்துவ சாதனங்களின் ஒழுங்குமுறை நடைமுறைகள் குறித்து ஜே.பி .நட்டா ஆய்வு

மருந்துகள் ஒழுங்குமுறையில் இந்தியா உலகளாவிய முன்னணி நாடாக மாறுவதற்கு, நமது செயல்பாடுகள் சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார். மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள் முறைப்படுத்தப்படுத்துதலை ஆய்வு செய்வது குறித்த கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார். மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திரு அபூர்வா சந்திரா, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் (டிசிஜிஐ) டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மருந்துகளை உற்பத்தி செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஜே. பி. நட்டா, மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ தனது நடவடிக்கைகளின் மூலம் உலகத் தரத்தை அடைய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரே மாதிரியான தன்மை, தொழில்நுட்ப மேம்பாடு, எதிர்கால அணுகுமுறை, மிக உயர்ந்த தரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மேம்பாடு தேவை என்று அவர் கூறினார்.

மருந்துகள், மருத்துவ சாதனங்கள் தொழில்துறையினரின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியம் என்று மத்திய சுகாதார அமைச்சர் கூறினார். “ஒழுங்குமுறை தேவைகளுக்கு உட்பட்டு மருந்து தொழில்துறைக்கு எளிதாக வணிகம் செய்வதை உறுதி செய்யும் வழிமுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்று ஜேபி நட்டா தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...