8 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகும் பாஜக

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேஜ., கூட்டணி அரசு, 2014ல் பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சிறப்பான கொண்டாட்டங்களுக்கு, பாஜ., தயாராகிவருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக, எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தமுடியாத நிலை இருந்தது. அவற்றை ஈடுகட்டும் வகையில், இந்தஆண்டு மொத்தமாக கொண்டாடிவிட வேண்டுமென, நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்வமாக உள்ளனர்.இதையடுத்து, கடந்த சிலவாரங்களாகவே மேலிடத்தலைவர்கள் இது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பா.ஜ., தேசியதலைவர் ஜேபி.நட்டா உத்தரவின் பேரில், 26 பக்கங்களை கொண்ட சிறுகையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

‘சேவை, சிறந்தநிர்வாகம், ஏழைகளுக்கான நலன்கள்’ என்ற தலைப்பிலான இந்த கையேட்டில், மத்தியஅரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டு மென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுபற்றிய விபரம்:ஒவ்வொரு பா.ஜ., தொண்டரும், 10 நாட்களுக்கு, மொத்தம் 72 மணிநேரம் செலவிட்டு, மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் பிரசாரம் செய்திட வேண்டும். கொரோனா தடுப்பூசி பணிகள் உள்ளிட்ட, பொது சேவைகளில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள், மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களின் நேரடி பயனாளிகளை அடையாளம்கண்டு, அவர்களை கவுரவிக்க வேண்டும்.பா.ஜ., அரசு, பல்வேறு துறைகளில், கடந்த எட்டு ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகளை, பாடல்கள், இணையதளம், பாக்கெட் டயரிகள் என விதவிதமான வழிகள் வாயிலாக மக்களிடம் சென்று சேர்க்கவேண்டும்.

சமூக வலைதளங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றிலும், மத்தியஅரசின் சேவைகளை விளம்பர படங்களாக எடுத்து பொது மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும்.மத்திய அமைச்சர்கள், நடைபயணம் மேற்கொண்டு மக்களைச்சந்திக்க வேண்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மாநில அரசின் நலத் திட்டங்கள் குறித்த சிறுபுத்தகங்களை தயாரித்து மக்களிடம் வினியோகிக்க வேண்டும்.

சிறுபான்மை சமூகங்களுக்காக செய்யப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகள்குறித்து வீதிகள் தோறும் பிரசாரங்கள், சிறுசிறு ஆலோசனை கூட்டங்கள், கருத்தரங்குகளை, வரும் ஜுன் 6 முதல் 8 வரையில் நடத்தவேண்டும்.இளைஞரணி சார்பில், ஜுன் 7 முதல் 13 வரையில், மாவட்டங்கள் தோறும், பைக்பேரணிகளை நடத்த வேண்டும்; அவற்றில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...