8 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகும் பாஜக

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேஜ., கூட்டணி அரசு, 2014ல் பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சிறப்பான கொண்டாட்டங்களுக்கு, பாஜ., தயாராகிவருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக, எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தமுடியாத நிலை இருந்தது. அவற்றை ஈடுகட்டும் வகையில், இந்தஆண்டு மொத்தமாக கொண்டாடிவிட வேண்டுமென, நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்வமாக உள்ளனர்.இதையடுத்து, கடந்த சிலவாரங்களாகவே மேலிடத்தலைவர்கள் இது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பா.ஜ., தேசியதலைவர் ஜேபி.நட்டா உத்தரவின் பேரில், 26 பக்கங்களை கொண்ட சிறுகையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

‘சேவை, சிறந்தநிர்வாகம், ஏழைகளுக்கான நலன்கள்’ என்ற தலைப்பிலான இந்த கையேட்டில், மத்தியஅரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டு மென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுபற்றிய விபரம்:ஒவ்வொரு பா.ஜ., தொண்டரும், 10 நாட்களுக்கு, மொத்தம் 72 மணிநேரம் செலவிட்டு, மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் பிரசாரம் செய்திட வேண்டும். கொரோனா தடுப்பூசி பணிகள் உள்ளிட்ட, பொது சேவைகளில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள், மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களின் நேரடி பயனாளிகளை அடையாளம்கண்டு, அவர்களை கவுரவிக்க வேண்டும்.பா.ஜ., அரசு, பல்வேறு துறைகளில், கடந்த எட்டு ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகளை, பாடல்கள், இணையதளம், பாக்கெட் டயரிகள் என விதவிதமான வழிகள் வாயிலாக மக்களிடம் சென்று சேர்க்கவேண்டும்.

சமூக வலைதளங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றிலும், மத்தியஅரசின் சேவைகளை விளம்பர படங்களாக எடுத்து பொது மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும்.மத்திய அமைச்சர்கள், நடைபயணம் மேற்கொண்டு மக்களைச்சந்திக்க வேண்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மாநில அரசின் நலத் திட்டங்கள் குறித்த சிறுபுத்தகங்களை தயாரித்து மக்களிடம் வினியோகிக்க வேண்டும்.

சிறுபான்மை சமூகங்களுக்காக செய்யப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகள்குறித்து வீதிகள் தோறும் பிரசாரங்கள், சிறுசிறு ஆலோசனை கூட்டங்கள், கருத்தரங்குகளை, வரும் ஜுன் 6 முதல் 8 வரையில் நடத்தவேண்டும்.இளைஞரணி சார்பில், ஜுன் 7 முதல் 13 வரையில், மாவட்டங்கள் தோறும், பைக்பேரணிகளை நடத்த வேண்டும்; அவற்றில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...