பாதுகாப்புப் படைகளில் பணிபுரிவோருக்கு, வீர தீர செயல்கள் புரிந்ததற்கான முதல் கட்ட விருது வழங்கும் விழா புதுதில்லியில் நேற்று (05.07.2024) நடைபெற்றது. குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
ஆயுதப்படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகள், மாநில, யூனியன் பிரதேசக் காவல்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
10 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதுகளும், 26 பேருக்கு சௌர்ய சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன.
இதில் ஏழு பேருக்கு மரணத்திற்குப் பிந்தைய கீர்த்தி சக்ரா விருதுகளும், ஏழு பேருக்கு மரணத்திற்குப் பிந்தைய சௌர்ய சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன.
வெல்லமுடியாத துணிச்சல், கடமையில் தீவிர அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |