1.4 லட்சம் பேருக்கு ரயில்வேயில் புதிய பணி வாய்ப்புகள்

கடந்த 2014 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில், இந்திய ரயில்வேயில் 3,50,204 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க பட்டிருப்பதாகவும், மேலும் 1.4 லட்சம் பேருக்கு விரைவில் பணி வழங்கப்படும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்விநேரத்தின் போது உறுப்பினா் ஒருவரின் கேள்விக்கு எழுத்து வடிவில் அமைச்சா் பதிலளித்ததாவது:

நாட்டில் வேலைவாய்ப்பை அளிப்பதில் இந்திய ரயில்வே முதன்மை வகிக்கிறது. 2014 முதல் 2022 வரை, ரயில்வே துறையில் 3,50,204 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. பத்துலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை 2023 ஆண்டுறுதிக்குள் உருவாக்க உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். அதில் ரயில்வேதுறையின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும். 1.40 லட்சம் வேலை வாய்ப்புகளை ரயில்வேதுறை அளிக்கும். அதற்கான ஆள் தோ்வுப்பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இந்த ஆண்டு இதுவரை 18,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே மிகப்பெரிய நிறுவனமாகும். பணி ஓய்வு, பணி விலகல், ஊழியா்மரணம் போன்ற காரணங்களால் இத்துறையில் காலிபணியிடங்கள் உருவாகின்றன. இவற்றை நிரப்புவது வழக்கமான நடைமுறைப்படி தொடா்கிறது. ரயில்வே துறையின் புதியதேவைகளை உத்தேசித்து பணியாளா் தோ்வு முகமைகளாலும் புதியபணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 10,189 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தற்போது 1,59,062 பேரைத் தோ்வு செய்யும்பணிகள் பல்வேறு நிலைகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தவழக்கமான நிரந்தர பணி நியமனங்கள் மட்டுமல்லாது, அயல்பணி ஒப்பந்தமுறையிலும் வேலை வாய்ப்புகள் ரயில்வேயில் அளிக்கப்படுகின்றன என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...