‘இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை எதிர்நோக்குகிறோம்’ என ரஷ்யா செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில் நாளை (ஜூலை 08) மாஸ்கோ செல்லும் பிரதமர் மோடி, இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இரு நாட்டு உறவுகள், சர்வதேச மற்றும் பிராந்திய உறவுகள் குறித்தும் புடினுடன் ஆலோசனை நடத்தும் மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
மோடி வருகை
‘இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை எதிர்நோக்குகிறோம். ரஷ்ய அதிகாரிகளுடனான இந்தியப் பிரதமரின் சந்திப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும்’ என ரஷ்யா செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ஜூலை 9ம் தேதி ஆஸ்திரியா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் வேன் டெர் பெலனை சந்தித்து பேசுகிறார். 41 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரியா செல்லும் முதல் பிரதமர், நரேந்திர மோடி ஆவார். அங்கிருந்து ஜூலை 10ம் தேதி பிரதமர் தாயகம் கிளம்புகிறார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |