மண்டல ஊரக வங்கிகளின் ஆய்வுக்கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது

மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில், புதுதில்லியில் இன்று, மண்டல ஊரக வங்கிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதிச் சேவைகள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர், கூடுதல் செயலாளர், பொருளாதார நிதிச் சேவையின் உயர் அதிகாரிகள், ரிசர்வ் வங்கி, சிட்பி, நபார்டு ஆகியவற்றின் பிரதிநிதிகள், மண்டல ஊரக வங்கிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

43 மண்டல ஊரக வங்கிகளுடனான இந்த கூட்டம், வணிக செயல்திறன், டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொகுப்புகளில் வணிக வளர்ச்சியை ஊக்குவித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

கிராமப்புற பொருளாதாரத்தை ஆதரிப்பதில் மண்டல ஊரக வங்கிகளின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, பிரதமர் விஸ்வகர்மா மற்றும் பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் கடன்களை அனுமதிக்கும் போது, பயனாளிகளை தெளிவாக அடையாளம் காண்பதில், அதிக கவனம் செலுத்துமாறு, மண்டல ஊரக வங்கிகளை மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார். மண்டல ஊரக வங்கிகள் தரைமட்ட வேளாண் கடன் வழங்கலில் தங்கள் பங்கை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டன.

ஆய்வுக் கூட்டத்தில் விளக்கக் காட்சியின் போது, 2022-ம் ஆண்டில் வழக்கமான மறுஆய்வு தொடங்கப்பட்டதிலிருந்து மண்டல ஊரக வங்கிகளின் நிதி செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை திருமதி சீதாராமன் பாராட்டினார், மேலும் எதிர்காலத்திலும் இந்த விரைவைத் தொடருமாறு ஊரக வங்கிகளை வலியுறுத்தினார். 2023-24 நிதியாண்டில் மண்டல ஊரக வங்கிகள் இதுவரை இல்லாத அளவுக்கு ஒருங்கிணைந்த நிகர லாபம் ₹7,571 கோடியை பதிவு செய்துள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...