விவசாயிகள் குறித்து காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிறது -சீதாராமன் பதிலடி

விவசாயிகள் குறித்து காங்., முதலைக் கண்ணீர் வடிக்கிறது என லோக்சபாவில் , மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன் கூறினார்.
பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது
*தற்போது தாக்கல் ஆன பட்ஜெட் மிஷன் 2047 க்கான முதல் படியாகும்.
*பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.48.21 லட்சம் கோடி
*கோவிட் காலத்தில் மத்திய அரசின் துரித நடவடிக்கையால் மீண்டெழுந்தோம்
*சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு
*2014 ஐ விட விவசாய துறைக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
*சுகாதாரத்துறைக்கு 1.36 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*பட்ஜெட்டில் எந்த துறைக்கும் நிதி குறைக்கப்படவில்லை. கல்விக்கான ஒதுக்கீடும் உயர்த்தப்பட்டு உள்ளது.
*நகர்ப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
*இந்தியாவை வேகமாக வளரும் பொருளாதார நாடாக மக்கள் மாற்றி உள்ளனர்.
*நிதிப்பற்றாக்குறை, நாட்டின் ஜிடிபி.,யில் 4.9 சதவீதமாக இருக்கும்.
*காஷ்மீரை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 42,277 கோடி ரூபாய் காஷ்மீர் மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை 5.7 சதவீதமாக குறைந்துள்ளது.
*2047 க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே எங்களது நோக்கம்.
*இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு உள்ளதாக கூறுவது தவறு
*பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால், அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என அர்த்தமில்லை.
*தவறான புரிதலோடு சிலர் கருத்து வெளியிடுகின்றனர்.
*தவறான கருத்துகளை பரப்பும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு உள்ளன.
*சிலர் கூறிய தவறான கருத்துகள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
*ஐமுகூ ஆட்சி பட்ஜெட்டிலும் ஒவ்வொரு மாநிலத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
*2004-05 பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இல்லை. அதற்காக அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லையா
*2006-07 பட்ஜெட்டில் 13 மாநிலங்களின் பெயர் இல்லை.
*2009- 2010 ஆண்டுகளில் 2 மாநிலங்களின் பெயர் மட்டுமே இருந்தது.
*நீங்கள் செய்தால் தவறில்லை. நாங்கள் செய்தால் மட்டும் தவறா
*மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டுகின்றன
*பல்வேறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கேரளாவிற்கு பெரிய நெடுஞ்சாலை திட்டம்அறிவிப்பு
*கேரளாவின் விழிஞம் துறைமுகம் அதானிக்கு ஒப்படைக்கப்பட்ட போது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. லோக்சபாவில் ஏ1 ஏ2 எனக்கூறியவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை
*ஐமுகூ ஆட்சியில் வேலைவாய்ப்பு குறித்து காங்., விவாதிக்கவில்லை.
* விவசாயிகளை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.
*குறைந்தபட்ச ஆதார விலையை ஐமுகூ., ஏற்றுக் கொள்ளவில்லை.
*விவசாயிகள் குறித்து காங்கிரஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறது
* ஐமுகூ., ஆட்சியின் போது வேலைவாய்ப்பின்மை குறித்து காங்கிரஸ் விவாதிக்க மறுத்தது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...