மாநிலங்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை -நிர்மலா சீதாராமன்

புதுடில்லி, ”பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறித்து பொய்யான தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்ப வேண்டாம். எந்த மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை,” என, எதிர்க்கட்சிகளிடம் தெரிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முந்தைய பட்ஜெட் உரையை நினைவுபடுத்தி லோக்சபாவில் நேற்று காரசாரமாக பேசினார்.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2024 – 25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ஆந்திராவுக்கு 15,000 கோடி ரூபாயும், பீஹாருக்கு 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது கடும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மேலும், பட்ஜெட் உரையில் தமிழகம் உட்பட 17 மாநிலங்களின் பெயர்கள் கூட இடம் பெறவில்லை என விமர்சித்த எதிர்க்கட்சிகள், பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிப்பதாக குற்றஞ்சாட்டின.

தன் பட்ஜெட் நிறைவு உரையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்தார். அவர் பேசியதாவது:

இந்த பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. அப்படியொரு தோற்றத்தை உருவாக்க, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்க சவால் விடுக்கிறேன்… அவர்கள் இதுவரை தாக்கல் செய்த பட்ஜெட்களில் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளனரா?

கடந்த 2004 – 05ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில், 17 மாநிலங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. அந்த மாநிலங்களுக்கு நிதி சென்று சேரவில்லையா? அப்படி அவர்கள் நிதியை நிறுத்தி வைத்து இருந்தால் இப்போது எங்களிடம் கேள்வி கேட்கலாம்.

அதேபோல, 2005 – 06 பட்ஜெட்டில் 18 மாநிலங்களின் பெயர்களும், 2007 – 08ல் 16 மாநிலங்களின் பெயர்களும், 2009 – 10ல் 20 மாநிலங்களின் பெயர்களும் விடுபட்டு இருந்தன.

பட்ஜெட்டில் பெயர் இடம் பெறாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என பொய் பிரசாரம் செய்து மக்களை திசை திருப்பாதீர்கள்.

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக நாம் உள்ளோம். கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மூலதன செலவின உந்துதல் காரணமாக, பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீண்டுள்ளோம்.

இலக்கு நிர்ணயம்

கடந்த 2023 – 24ல் நிதிப் பற்றாக்குறை, 5.6 சதவீதமாக இருந்தது; இதை, 4.9 சதவீதமாக குறைக்க நடப்பு நிதியாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; 2025 – 26ல், 4.5 சதவீதமாக குறையும்.

இந்த பட்ஜெட்டில் ஜம்மு – காஷ்மீருக்கு 17,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஜம்மு – காஷ்மீர் போலீஸ் துறையின் செலவுக்கான 12,000 கோடி ரூபாயும் அடங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின், 2024 – 25ம் நிதியாண்டுக்கான 48.21 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட், லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு மிகப்பெரி ...

சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிற ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்க ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு நாட்டின்வளர்ச்சிக்கு பெண்கள்முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமானபழக்கவழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடி ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்க ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...