மாநிலங்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை -நிர்மலா சீதாராமன்

புதுடில்லி, ”பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறித்து பொய்யான தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்ப வேண்டாம். எந்த மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை,” என, எதிர்க்கட்சிகளிடம் தெரிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முந்தைய பட்ஜெட் உரையை நினைவுபடுத்தி லோக்சபாவில் நேற்று காரசாரமாக பேசினார்.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2024 – 25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ஆந்திராவுக்கு 15,000 கோடி ரூபாயும், பீஹாருக்கு 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது கடும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மேலும், பட்ஜெட் உரையில் தமிழகம் உட்பட 17 மாநிலங்களின் பெயர்கள் கூட இடம் பெறவில்லை என விமர்சித்த எதிர்க்கட்சிகள், பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிப்பதாக குற்றஞ்சாட்டின.

தன் பட்ஜெட் நிறைவு உரையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்தார். அவர் பேசியதாவது:

இந்த பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. அப்படியொரு தோற்றத்தை உருவாக்க, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்க சவால் விடுக்கிறேன்… அவர்கள் இதுவரை தாக்கல் செய்த பட்ஜெட்களில் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளனரா?

கடந்த 2004 – 05ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில், 17 மாநிலங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. அந்த மாநிலங்களுக்கு நிதி சென்று சேரவில்லையா? அப்படி அவர்கள் நிதியை நிறுத்தி வைத்து இருந்தால் இப்போது எங்களிடம் கேள்வி கேட்கலாம்.

அதேபோல, 2005 – 06 பட்ஜெட்டில் 18 மாநிலங்களின் பெயர்களும், 2007 – 08ல் 16 மாநிலங்களின் பெயர்களும், 2009 – 10ல் 20 மாநிலங்களின் பெயர்களும் விடுபட்டு இருந்தன.

பட்ஜெட்டில் பெயர் இடம் பெறாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என பொய் பிரசாரம் செய்து மக்களை திசை திருப்பாதீர்கள்.

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக நாம் உள்ளோம். கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மூலதன செலவின உந்துதல் காரணமாக, பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீண்டுள்ளோம்.

இலக்கு நிர்ணயம்

கடந்த 2023 – 24ல் நிதிப் பற்றாக்குறை, 5.6 சதவீதமாக இருந்தது; இதை, 4.9 சதவீதமாக குறைக்க நடப்பு நிதியாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; 2025 – 26ல், 4.5 சதவீதமாக குறையும்.

இந்த பட்ஜெட்டில் ஜம்மு – காஷ்மீருக்கு 17,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஜம்மு – காஷ்மீர் போலீஸ் துறையின் செலவுக்கான 12,000 கோடி ரூபாயும் அடங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின், 2024 – 25ம் நிதியாண்டுக்கான 48.21 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட், லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...