2025ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தொடர்பாக, பொருளாதார நிபுணர்களுடன் இன்று (டிச.,24) பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
2025ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. 8 முறையாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், இன்று (டிச., 24) டில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், நிடி ஆயோக் துணை தலைவர் சுமன் பெர்ரி மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முக்கியமான பொருளாதார சவால்கள் எதிர்கொள்வதையும், பல்வேறு துறைகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. வரவுசெலவுத் திட்டத்தை வடிவமைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |