நிலச்சரிவைக் குறித்து முன்கூட்டியே கேரளாவுக்கு பலமுறை எச்சரிக்கை விடப்பட்டது – அமித் ஷா

புதுடில்லி, ”கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஏழு நாட்களுக்கு முன்னரே கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில், குறுகியகால கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, கேரளநிலச்சரிவு குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒரு வாரத்திற்கு முன்னரே கேரள அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. கடந்த ஜூலை 23ம் தேதியன்று அது தொடர்பான முதல் எச்சரிக்கை விடப்பட்டது. அன்றைய தினமே, தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒன்பது குழுக்கள், விமானம் வாயிலாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து, ஜூலை 24, 25 மற்றும் 26ம் தேதிகளிலும் கனமழை மற்றும் நிலச்சரிவு குறித்து மீண்டும் தொடர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

ஏழு நாட்களுக்கு முன்…

அங்கு, 20 செ.மீ.,க்கு அதிகமாக மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டது. மேலும், மூன்று மீட்புக் குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது. ஆனால், மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நெறிமுறை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
தயவுசெய்து நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்; கூச்சலிடாதீர்கள். வானிலை எச்சரிக்கை அறிக்கையை தயவுசெய்து படியுங்கள்.
இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தியதால் தான் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. அம்மாநில அரசு அங்கிருந்த மக்களை வெளியேற்றவில்லை. கேரள அரசு விழிப்புடன் இருந்திருந்தால் உயிரிழப்புகளை குறைத்திருக்கலாம்.
இயற்கைப் பேரழிவுகள் குறித்து, குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னரே எச்சரிக்கை செய்யக்கூடிய நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த வகையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை பொருட்படுத்தாததே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம்.

மீட்புப் படைகள் அனுப்பி வைக்கப்பட்ட பின், கேரள அரசு என்ன செய்தது என நான் கேட்கலாமா? பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மக்கள் வசிக்கின்றனரா, இல்லையா?

அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனரா? இல்லையா? அவர்கள் ஏன் வெளியேற்றப்படவில்லை? யாராவது இதை தடுத்து நிறுத்தினரா?

வெளியேற்றப்பட்டிருந்தால் மக்கள் எப்படி இறந்தனர்? இந்த துயரமான நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, கேரள மக்களுடனும், அம்மாநில அரசுடனும் ஒரு பாறை போல நிற்கிறது.

வலியுறுத்தல்

இந்த நேரத்தில், அவர்களுக்கு தேவையான எல்லா உதவியையும் மத்திய அரசு செய்யும் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விவாதத்தின் போது, காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ்,அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சி எம்.பி.,க்கள், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...