உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தின் தாய் -பிரதமர் மோடி பெருமிதம்

‘உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தின் தாய். தேச நலனுக்காக நீதிமன்றங்கள் செயல்படுகிறது’ என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

டில்லியில் நீதித்துறைக்கான தேசிய மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டை இன்று (ஆகஸ்ட் 31) பிரதமர் மோடி துவக்கி வைத்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், கபில் சிபல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நீதிமன்றங்கள் தேச நலனுக்காக செயல்பட்டு வருகிறது. நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்றம் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியர்கள் ஒருபோதும் நீதித்துறை மீதோ, நீதிமன்றங்கள் மீதோ சந்தேகம் எழுப்பியதில்லை.

சுப்ரீம் கோர்ட்டின் 75 ஆண்டுகள் என்பது ஒரு நிறுவனத்தின் பயணம் அல்ல; இந்திய அரசியலமைப்பு மற்றும் மதிப்பின் பயணம். உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தின் தாய். இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்துகிறது. நெருக்கடி நிலையின் இருண்ட காலத்திலும் உச்ச நீதிமன்றம் எங்கள் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தது.

எப்போதும் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தது. நீதித்துறையில் மாவட்ட நீதித்துறை என்பது முக்கியமான தூணாக விளங்குகிறது. நமது குற்றவியல் சட்டங்கள் காலனித்துவ சிந்தனையிலிருந்து விடுவிக்க வழிவகை செய்தது. புதிய சட்டங்கள் மக்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கும்.

மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 4.5 கோடி வழக்குகளை தீர்க்க வழிவகை ஆராயப்படுகிறது. 10 ஆண்டுகளில் நீதித்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு ரூ.8 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. புதிய கிரிமினல் சட்டங்கள் குடிமக்கள், நீதித்துறைக்கு முன்னுரிமை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளை மையமாக கொண்டு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சமூகத்திற்கு மிகவும் கவலையளிப்பவையாக உள்ளன.இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...