சமூக காடுகள் திட்டம்

நகர்ப்புறங்களில் பசுமை மண்டலங்களை மேம்படுத்தும் மாநிலங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க நகர்ப்புற வனத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி வழங்குகிறது. மாநகராட்சி, நகராட்சி மன்றங்கள்,  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள நகரங்களில் குடியிருப்பவர்களுக்கு முழுமையான ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை வழங்குவதற்காக 1000 நகர்ப்புற வன மண்டலங்களை உருவாக்கவும், அதன் மூலம் தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான மற்றும் நிலையான நகரங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் நகர்ப்புற வனத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வனம், வனப்பகுதி இழப்பீட்டு நிதி மேலாண்மை  மற்றும் திட்டமிடுதல் ஆணைய நிதியால் ஆதரிக்கப்படுகிறது. நகர்ப்புற வனத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

நகர்ப்புற அமைப்பில் பசுமையான இடம் மற்றும் அழகியல் சூழலை உருவாக்குதல்.

தாவரங்கள் மற்றும் பல்லுயிர் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் சுற்றுச்சூழல் மேற்பார்வையை வளர்த்தல்.

பிராந்தியத்தின் முக்கியமான தாவரங்களின் இருப்பிட பாதுகாப்பை எளிதாக்குதல்.

மாசு தணிப்பு, தூய்மையான காற்று, இரைச்சல் குறைப்பு, நீர் அறுவடை மற்றும் வெப்ப தீவுகள் விளைவு மூலம் நகரங்களின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு பங்களிப்பு.

நகரத்தில் வசிப்பவர்களுக்கு சுகாதார நன்மைகளை நீட்டித்தல் மற்றும்

நகரங்களுக்கு காலநிலை நெகிழ்ச்சியாக உதவுதல்.

வனம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக, 1980, இந்திய வனச் சட்டம், 1927, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 மற்றும் பிற மத்திய, மாநில சட்டங்கள் உட்பட பல்வேறு சட்டங்கள் அந்தந்த மாநில அரசு, யூனியன் பிரதேச நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...