கூட்டுறவு வங்கிகள் டிஜிட்டல்மயமாக்கம்

கிராமப்புறங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ரூ.2,516 கோடி மதிப்பீட்டில்  கணினி மயமாக்கப்படவிருப்பதாக மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், இந்த்த் திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நபார்டு வங்கியுடன் இணைக்கப்படுவதுடன், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் இதுவரை ரூ.794 கோடி பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 13 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்குவதன் வாயிலாக கூட்டுறவு கடன் அமைப்புகளை நீண்ட காலத்திற்கு வலுப்படுத்தும்  திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளர். இத்திட்டத்தின் கீழ், இதுவரை 8 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு வன்பொருள் வாங்கவும், டிஜிட்டல் மயமாக்கவும் மத்திய அரசின் பங்காக ரூ.4.26 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்க தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்ற தனி அமைப்பு  ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், எந்தவொரு கிளையிலும் பரிமாற்றம் செய்யத்தக்க கோர் பேங்கிங் முறை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...