கூட்டுறவு வங்கிகள் டிஜிட்டல்மயமாக்கம்

கிராமப்புறங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ரூ.2,516 கோடி மதிப்பீட்டில்  கணினி மயமாக்கப்படவிருப்பதாக மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், இந்த்த் திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நபார்டு வங்கியுடன் இணைக்கப்படுவதுடன், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் இதுவரை ரூ.794 கோடி பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 13 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்குவதன் வாயிலாக கூட்டுறவு கடன் அமைப்புகளை நீண்ட காலத்திற்கு வலுப்படுத்தும்  திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளர். இத்திட்டத்தின் கீழ், இதுவரை 8 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு வன்பொருள் வாங்கவும், டிஜிட்டல் மயமாக்கவும் மத்திய அரசின் பங்காக ரூ.4.26 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்க தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்ற தனி அமைப்பு  ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், எந்தவொரு கிளையிலும் பரிமாற்றம் செய்யத்தக்க கோர் பேங்கிங் முறை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...