2026-ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் அமித் ஷா உறுதி

வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 55 பேரிடம் அமித்ஷா பேசியதாவது: வன்முறையை கைவிட்டு, மாவோயிஸ்டுகள் சரண் அடைய வேண்டும். நாட்டில் நக்சலைட் தாக்குதல் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும். இல்லையென்றால் அதற்கு முன்னதாகவே, நக்சலைட் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளனர்.

ஒரு காலத்தில் சத்தீஸ்கரில் பல்வேறு மாவட்டங்களில் நக்சலைட் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. தற்போது, நான்கு மாவட்டங்களில் மட்டுமே சில நேரங்களில் நக்சலைட் தாக்குதல்கள் நடக்கிறது. சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாநில அரசுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் ஒரு நலத்திட்டத்தை விரைவில் வெளியிடுவோம். வேலைவாய்ப்புகள், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் நடவடிக்கைகள் எடுப்பதில் கவனம் செலுத்தி மக்களுக்கு நாங்கள் உதவுவோம்.

பாதுகாப்புப் படைகள் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர், இந்த ஆண்டு பாதுகாப்புப் படையினரின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 164 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். எங்களது போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று நான் நம்புகிறேன். ஏற்கனவே ஏற்பட்ட சேதத்தை என்னால் திரும்ப பெற முடியாது. ஆனால் அப்பாவி மக்கள் நக்சலைட் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த முயற்சிப்பேன். கடந்த காங்கிஸ் ஆட்சியின் போது 6,617 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். இப்போது 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...