2026-ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் அமித் ஷா உறுதி

வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 55 பேரிடம் அமித்ஷா பேசியதாவது: வன்முறையை கைவிட்டு, மாவோயிஸ்டுகள் சரண் அடைய வேண்டும். நாட்டில் நக்சலைட் தாக்குதல் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும். இல்லையென்றால் அதற்கு முன்னதாகவே, நக்சலைட் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளனர்.

ஒரு காலத்தில் சத்தீஸ்கரில் பல்வேறு மாவட்டங்களில் நக்சலைட் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. தற்போது, நான்கு மாவட்டங்களில் மட்டுமே சில நேரங்களில் நக்சலைட் தாக்குதல்கள் நடக்கிறது. சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாநில அரசுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் ஒரு நலத்திட்டத்தை விரைவில் வெளியிடுவோம். வேலைவாய்ப்புகள், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் நடவடிக்கைகள் எடுப்பதில் கவனம் செலுத்தி மக்களுக்கு நாங்கள் உதவுவோம்.

பாதுகாப்புப் படைகள் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர், இந்த ஆண்டு பாதுகாப்புப் படையினரின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 164 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். எங்களது போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று நான் நம்புகிறேன். ஏற்கனவே ஏற்பட்ட சேதத்தை என்னால் திரும்ப பெற முடியாது. ஆனால் அப்பாவி மக்கள் நக்சலைட் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த முயற்சிப்பேன். கடந்த காங்கிஸ் ஆட்சியின் போது 6,617 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். இப்போது 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...