மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகள் நாட்டிற்கு புதிய நம்பிக்கையை தருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்

” மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் நாட்டிற்கு புதிய நம்பிக்கையை தருகிறது, ” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒடிசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., குறித்து எதிர்க்கட்சிகள் இரவும் பகலும் பொய்யை பரப்புகின்றன. இது அவர்களின் வழக்கம். ஆனால், மக்கள் பா.ஜ.,வுக்கு ஆசி வழங்குகின்றனர். சில மாதங்களுக்கு முன் இங்கு தேர்தல் நடந்த போது, இம்மாநிலத்தில் பெரிய அரசியல் நிபுணர்கள் பா.ஜ.,வை நிராகரித்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மக்களின் எழுச்சியை என்னால் பார்க்க முடிகிறது. மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகள் தேசத்திற்கு புதிய நம்பிக்கையை தருகிறது.

அதிகாரம் தங்களது பிறப்புரிமை எனக்கருதியவர்கள், கடந்த சில ஆண்டுகளாக மத்திய ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளனர். தங்களுக்கு ஆசி வழங்காமல் மற்றவர்களுக்கு வழங்கியதற்காக மக்கள் மீது அதிக கோபத்தில் உள்ளனர். அவர்கள் நாட்டிற்கு எதிராக சதி செய்கின்றனர். நாட்டை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தில் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.

75 ஆண்டுகளாக பொய் மற்றும் வதந்திக்கான கடையை அவர்கள் திறந்து வைத்தனர். தற்போது, அவர்கள் இதனை இயக்கமாக மாற்றி வேகப்படுத்தி உள்ளனர். அவர்களின் செயல்பாடு, நாட்டை நேசிக்கும் மக்களுக்கு பெரிய சவாலாக மாறி உள்ளது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு பொய்யையும் அவிழ்க்க வேண்டி உள்ளது. இந்த அதிகார பசியில் உள்ளவர்கள் மக்களிடம் தொடர்ந்து பொய் சொல்லி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் பெரிய பொய்யை கொண்டு வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...