மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகள் நாட்டிற்கு புதிய நம்பிக்கையை தருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்

” மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் நாட்டிற்கு புதிய நம்பிக்கையை தருகிறது, ” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒடிசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., குறித்து எதிர்க்கட்சிகள் இரவும் பகலும் பொய்யை பரப்புகின்றன. இது அவர்களின் வழக்கம். ஆனால், மக்கள் பா.ஜ.,வுக்கு ஆசி வழங்குகின்றனர். சில மாதங்களுக்கு முன் இங்கு தேர்தல் நடந்த போது, இம்மாநிலத்தில் பெரிய அரசியல் நிபுணர்கள் பா.ஜ.,வை நிராகரித்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மக்களின் எழுச்சியை என்னால் பார்க்க முடிகிறது. மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகள் தேசத்திற்கு புதிய நம்பிக்கையை தருகிறது.

அதிகாரம் தங்களது பிறப்புரிமை எனக்கருதியவர்கள், கடந்த சில ஆண்டுகளாக மத்திய ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளனர். தங்களுக்கு ஆசி வழங்காமல் மற்றவர்களுக்கு வழங்கியதற்காக மக்கள் மீது அதிக கோபத்தில் உள்ளனர். அவர்கள் நாட்டிற்கு எதிராக சதி செய்கின்றனர். நாட்டை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தில் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.

75 ஆண்டுகளாக பொய் மற்றும் வதந்திக்கான கடையை அவர்கள் திறந்து வைத்தனர். தற்போது, அவர்கள் இதனை இயக்கமாக மாற்றி வேகப்படுத்தி உள்ளனர். அவர்களின் செயல்பாடு, நாட்டை நேசிக்கும் மக்களுக்கு பெரிய சவாலாக மாறி உள்ளது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு பொய்யையும் அவிழ்க்க வேண்டி உள்ளது. இந்த அதிகார பசியில் உள்ளவர்கள் மக்களிடம் தொடர்ந்து பொய் சொல்லி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் பெரிய பொய்யை கொண்டு வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமு ...

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கேரளமாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மைமாதிரியின் கீழ் ரூ.8 ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை ந ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் புனித வெள்ளி குறித்து மோடியின் பதிவு கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீ ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீர்கள் – வங்க தேசத்திற்கு இந்தியா கண்டனம் மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் ம ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந் ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...