சென்னை வெள்ள பிரச்னையை திசை திருப்பவே தி.மு. க வினர் கவர்னர் விவகாரத்தை கையில் எடுக்கின்றனர் – L .முருகன் பேட்டி

 ‘சென்னை வெள்ள விவகாரத்தை திசை திருப்பவே கவர்னர் பிரச்னையை தி.மு.க,.,வினர் கையில் எடுத்து இருக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

 இந்தி மாத கொண்டாட்ட விவகாரத்தில் தி.மு.க.,வின் குற்றச்சாட்டு மக்களை திசை திருப்பும் செயல். மத்திய பா.ஜ., அரசு தமிழுக்கு உரிய மரியாதை அளித்து வருகிறது. எல்லாம் விஷயத்திலும் அரசியல் செய்யக் கூடாது. சென்னை வெள்ளம் விவகாரத்தை திசை திருப்பவே கவர்னர் பிரச்னையை தி.மு.க,.,வினர் கையில் எடுத்து இருக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல.

தி.மு.க., நினைக்கும் அரசியல் எல்லாம் இப்பொழுது பண்ண முடியாது. மக்கள் தெளிவாக இருந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தி மொழிக்கு யாரும் ஆதரவாளர்கள் கிடையாது. அதேநேரத்தில் எதிர்ப்பாளர்களும் கிடையாது. சி.பி.எஸ்.,இ., பள்ளியில் இந்தி ஒரு மொழியாக இருக்கிறது எனக் கூறி பள்ளி நடத்தும் தி.மு.க.,வினர் இழுத்து மூட ரெடியா? இது அவர்களுக்கு வருமானத்தை கொடுக்கிறது.

தி.மு.க.,வினர் ஆக்கபூர்வமான அரசியலை செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை ஒழியுங்கள். தமிழகத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களை தீட்டுங்கள். மொழிகளை வைத்து மக்களை ஏமாற்ற வேண்டாம். தமிழை உலக அளவில் எடுத்து செல்வதில் முதன்மையாக இருப்பது பிரதமர் மோடி தான். ஒட்டுமொத்த தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...