பெண்களின் வருமானத்தை லட்சமாக உயர்த்தும் லக்பதி தீதிதிட்டம்

பெண்களின் வருமானத்தை ஆண்டுக்கு ஒருலட்சம் உயர்த்தும் நோக்கில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்தியஅரசு தொடங்கிய திட்டம்தான் லக்பதி தீதிதிட்டம். இந்த திட்டத்தில் சேரும் பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன்கிடைக்கும். அத்துடன் சுய தொழில் பயிற்சி அரசு சார்பிலேயே கொடுக்கப்படும். சிறப்பாக செயல் படும் பெண்களுக்கு அரசுசார்பில் சிறப்பு ஊக்கம் கொடுக்கப்படுவதுடன், புதியதொழில் வாய்ப்புகளும் கிடைக்கும். எந்ததொழில் வாய்ப்பும் இல்லை என நினைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் இந்ததிட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். லக்பதி தீதி திட்டத்தில் எப்படி சேருவது? என்னென்ன தொழில்பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன? என்பதை விரிவாக பார்க்கலாம்.

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும்பெண்களின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும்நோக்கில் தொடங்கப்பட்ட திட்டம்தான் லக்பதி தீதி திட்டம். மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, அந்த குழுக்களை சேர்ந்த பயனாளிகளுக்கு இந்ததிட்டத்தில் கடன் உதவித்தொகை, தொழில் பயிற்சிகள் எல்லாம் கொடுக்கப்படுகின்றன. பெண்கள் ஒருகுழுவாக இயங்கி இந்ததிட்டத்தின் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டமுடியும். ஒரே கண்டிஷன் என்னவென்றால் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருக்கும் பெண்கள்தான் இந்த திட்டத்தின் பயனாளிகள். அவர்கள் மட்டுமே லக்பதி தீதிதிட்டத்தில் சேர முடியும்.

லக்பதிதீதி திட்டத்தில் பிளம்மிங் வேலை, எல்இடி பல்பு உற்பத்தி, டிரோன் பயிற்சி மற்றும் பழுது பார்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். அதாவது, இந்த மூன்று பயிற்சிகள் மட்டுமல்லாது கூடுதல் பயிற்சிகளும் வழங்கப்படும். அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தை தொடர்புகொண்டால் இந்ததிட்டம் குறித்த தெளிவான விளக்கம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

லக்பதி திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள்

ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வருமான வரிச்சான்றிதழ், பான்கார்டு ஆகிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். நீங்கள் இருக்கும் மகளிர் சுய உதவிக்குழு விவரங்களையும் கொடுக்க வேண்டும்.

லக்பதி தீதி திட்டத்தில் சேர தகுதி

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாநிலத்தில் பெண் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் யாரும் அரசுவேலையில் இருக்ககூடாது. ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

லக்பதி தீதி திட்டத்தில் எப்படி சேருவது?

லக்பதி தீதி திட்டத்தில் சேருவதற்கு அருகில்உள்ள அங்கன்வாடி மையத்துக்கு செல்லுங்கள். இந்ததிட்டத்திற்கு தேவையான ஆவணங்களான இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு ஆகியவற்றை எடுத்துச் செல்லவும். அங்கு திட்டத்தைப்பற்றி விரிவான தகவல்கள் வழங்கப்படும். தொழிற்பயிற்சி, மானியம், கடன் உதவி, வட்டியில்லா கடன் ஆகியவை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு திட்டத்தில் சேருபவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். அதன்படி, லக்பதி தீதி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுங்கள்.

இந்த திட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் சேர்ந்து லட்சாதி பதியாகியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விரைவில் இந்ததிட்ட பயனாளிகளுக்கு கூடுதல் சலுகைகள், அறிவிப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.