பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம்

”பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு தகர்த்துள்ளது,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான, ‘பிக்கி’ சார்பில், ‘அதிகாரம், அரசியல் உள்ளிட்டவற்றில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத தடைகளை உடைத்து, வளர்ச்சி அடையும் பெண்கள்’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில், கல்வி, பொருளாதாரம், உள்கட்டமைப்புகள், தொழில்நுட்பம் என, அனைத்து துறைகளிலும், இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக நம் நாடு அடைந்துள்ள வளர்ச்சி, உலக நாடுகளை பிரமிக்க வைத்துள்ளது.

பெண்கள் முன்னேற்றம் அடையாமல், அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்காமல், நாட்டின் வளர்ச்சி முழுமை பெறாது. அதை உணர்ந்து, பிரதமராக மோடி பதவியேற்றது முதல், பெண்கள் நலனை மையப்படுத்தி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்கள் வீட்டு வேலைகளிலேயே முடங்கி விடக்கூடாது என்பதற்காகவே, 12 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு; 10 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு; 17 கோடி பெண்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் சொந்தக்காலில் நிற்க, அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும். அதற்கு அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். பெண்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, போலீஸ் நிலையங்களில் மூன்று பெண் எஸ்.ஐ.,க்கள், 10 பெண் காவலர்கள் இருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விரைந்து தண்டனை வழங்கவும், 866 விரைவு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அவற்றில், 410 நீதிமன்றங்கள் போக்சோ வழக்குகளை கையாளும் சிறப்பு நீதிமன்றங்கள். இதனால், 2.53 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், பிக்கி பெண்கள் பிரிவு தலைவர் திவ்யா அபிஷேக், நிர்வாகி சுதா சிவகுமார் ஆகியோர், பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ”அரசியல்வாதிகள் எதை செய்தாலும் விளம்பரத்திற்காக செய்வதாக சொல்லி விடுவர். எனக்கு சமைப்பது, வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நேரில் சென்று வாங்குவது பிடிக்கும். அப்படி, சென்னையில் காய்கறிகள் வாங்கியதும் விமர்சனத்திற்கு உள்ளானது,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...