பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – கவர்னர் ரவி

‘சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை, சென்னை அனுப்ப மறுக்கின்றனர்’ என, கவர்னர் ரவி தெரிவித்தார்.

அகில இந்திய மகளிர் சங்கத்தின் 93வது மாநாடு, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள பிரம்மகுமாரிகள் மையத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ரவி பங்கேற்று, பெண்கள் பாதுகாப்பு குறித்த கள ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். அப்போது, அவர் பேசியதாவது:

தமிழகத்திலிருந்து மட்டுமின்றி, வெளி மாநிலத்தில் இருந்து, ஏராளனமான பெண்கள் பங்கேற்று உள்ளீர்கள். தமிழகம் பாரம்பரியமிக்க அழகான மாநிலம். நேரம் கிடைக்கும் போது, நீங்கள் தமிழகத்தை முழுமையாக சுற்றிப் பார்க்க வேண்டும்.

ஆன்மிகம், உணவு, கலாசாரம் என, அனைத்தும் தமிழகம் முழுதும் நிறைந்துள்ளன.

நுாறு ஆண்டுகள் சிறப்பு மிக்க, இந்த மகளிர் இயக்கம், பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மிகவும் உறுதுணையாக செயல்பட்டு வருகிறது. பெண்கள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு மிகவும் நம்பகமான குரலாக இந்த இயக்கம் உள்ளது. தற்போது, அனைத்து துறைகளிலும், பெண்கள் முன்னிலையில் உள்ளனர்.

பல்கலை பட்டமளிப்பு விழாக்களில், மாணவர்களை காண்பது மிகவும் கடினமாக உள்ளது. 90 சதவீதம் மாணவியர் தான் உள்ளனர். அதேபோல், நாட்டின் வளர்ச்சியில், பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாடு முழுதும் உயர்கல்வியில் பெண்கள் தங்கப்பதக்கம் அதிகம் பெறுகின்றனர். ஆனால், தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலையில், பட்டமளிப்பு விழாக்களுக்கு செல்லும் போது, தங்கப்பதக்கம் பெற்ற மாணவியருடன் கலந்துரையாடுவது வழக்கம்.

அப்போது, பெற்றோர் தங்களை சென்னைக்கு செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர். பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லாததே, அதற்கு காரணம் எனக் கண்ணீருடன் கூறுகின்றனர். எனவே, பெரு நகரங்களில் பெண்களின் பாதுப்பை உறுதி செய்வது கட்டாயமாகி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இரட்டை வேடம் போடும் திருமாவளவன� ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – அண்ணாமலை தி.மு.க.,வினரைப் போல் இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் ...

தமிமொழியை கற்றுகொள்ளுங்கள் வெ� ...

தமிமொழியை கற்றுகொள்ளுங்கள் வெளிமாநிலத்தவர்களுக்கு கவர்னர் அறிவுரை 'அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தமிழகத்தில் ...

27 ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில� ...

27 ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் பாஜக ஆட்சி : முதல்வராக ரேகா குப்தா ஆட்சி டில்லியின் முதல்வராக, பா.ஜ.,வின் முதல் முறை எம்.எல்.ஏ.,வான ரேகா ...

பேரிடர் நிதி வழங்க மத்திய அரசு � ...

பேரிடர் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் – அமித்சா ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு ...

பாகிஸ்தானை விட காஷ்மீரில் ஜனநா� ...

பாகிஸ்தானை விட காஷ்மீரில் ஜனநாயகம் வலிமையாக உள்ளது – இந்தியா பதிலடி '' பாகிஸ்தானை விட காஷ்மீரில் ஜனநாயகம் வலிமையாகவும், துடிப்பாகவும் ...

புதிய கல்விகொள்கை தமிழகத்திற்� ...

புதிய கல்விகொள்கை தமிழகத்திற்கு அவசியம் – வரவேற்கும் மக்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதியக் கல்விக்கொள்கை தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...