தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார்

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இரண்டு நாள் பயணமாக ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில்ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கன்னவரம் சட்டமன்றத் தொகுதியின் கேசர்பள்ளிக்கு சென்றிருந்த திரு சவுகான், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் தெலங்கானாவின் மீனவலு, பெத்தகோபாவரம், மன்னூர், கட்லேரு ஆகிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை விமானம் மூலம் அமைச்சர் ஆய்வு செய்தார். கம்மம் தொகுதி மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர் விவாதித்தார். உடனடி உதவிகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று திரு சவுகன் அவர்களிடம் கூறினார்.

“உங்கள் வலியைப் புரிந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி என்னை அனுப்பியுள்ளார், நீங்கள் உங்கள் பயிர்களை இழந்துவிட்டீர்கள், ஆனால் அவர் உங்கள் உயிரை இழக்க அவர் விட மாட்டார். நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன், எனது விவசாய சகோதரரின் வலியை என்னால் உணர முடிகிறது. நாங்கள் தகுந்த இழப்பீடு வழங்குவோம் என்று திரு சவுகான் தெரிவித்தார். நெருக்கடி காலங்களில் விவசாயிகளிடமிருந்து கடன்களை வசூலிக்க வேண்டாம் எனறு வங்கிகளை கேட்போம். அடுத்த பயிருக்கான உரங்கள் மற்றும் விதைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும், விவசாயிகளின் வாழ்க்கையை இயல்பாக்க மாநில அரசுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம் என்றும் அவர் கூறினார்.

ஆந்திரப் பிரதேசத்திலும், தெலங்கானாவிலும் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அக்கறை கொண்டுள்ளதாக திரு சிவராஜ் சிங் சவுகான் கூறினார். மத்திய அரசின் பங்கையும் உள்ளடக்கிய மாநில பேரிடர் உதவி நிதிக்கு ரூ.3,448 கோடி உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...