தங்களாலும் மற்றவருக்கு பயனுள்ளதாக இருக்க முடியும் என நிரூபிக்கும் மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள், தங்களாலும் மற்றவருக்கு பயனுள்ளதாக இருக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். இவர்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக நிற்கின்றனர்.

தட்சிண கன்னடா, மங்களூரின் சக்தி நகரில், அரசு சார்ந்த மாற்றுத்திறனாளிகளின் உறைவிடப் பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவர்களுக்கு கல்வி மட்டும் போதிப்பது இல்லை. கைவினை பொருட்கள் தயாரிக்க கற்றுத்தரப்படுகிறது. இப்பள்ளியில் தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி, நறுமணமான ஊதுவர்த்தி தயாரிக்கப்படுகிறது.

பள்ளியின் நான்கு ஆசிரியர்களுக்கு, பெங்களூரின், கிராப்டிஞ்சன் பவுண்டேஷன் சார்பில், ஊதுவர்த்தி தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த இவர்கள், மாணவர்களுக்கு கற்றுத்தருகின்றனர். உறைவிடப் பள்ளியின் 20 மாணவர்கள் ஊதுவர்த்தி தயாரிக்கின்றனர்.

உலர்ந்த பூக்களின் இதழ்களை பொடியாக்கி, ஊதுவர்த்தி தயாரிக்கப்படுகிறது. கோவில், நிகழ்ச்சிகள், மார்க்கெட்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் மிச்சமாகும் பூக்களை சேகரிக்கின்றனர். ரோஜா, சாமந்தி, மல்லிகை, செண்டுப்பூ உட்பட, பலவிதமான பூக்கள் பயன்படுகின்றன. இவற்றை ஒரு வாரம் வரை நிழலில் உலர்த்துகின்றனர். அதன்பின் இதை பொடியாக்கி, வாசனை திரவியங்கள், தண்ணீர் சேர்த்து ஊதுவர்த்தி தயாரிக்கப்படுகிறது. ஊதுவர்த்திகளை பேக்கிங் செய்து விற்பனை செய்கின்றனர். இவர்கள் தயாரிக்கும் ஊதுவர்த்திக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பல இடங்களில் இருந்து ஆர்டர் வருகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் கிடைக்கிறது.

யாரையும் சார்ந்திராமல் தங்களாலும் உழைத்து சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இவர்களுக்குள் உருவாகிறது. உறைவிடப் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்களின் முயற்சியே இதற்கு காரணம். மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...