தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த சிஏஜி அறிக்கையை நேற்று சென்னையில் மத்திய முதன்மை கணக்காய்வு தலைவர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, மாநிலத்தின் ஜிடிபி மொத்தமாக 14 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், இது நாட்டின் மொத்த ஜிடிபியை விட 54% அதிகம் என்று குறிப்பிட்டார்.

மேலும், 2021-2022-ல் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.46,538 கோடியாக இருந்த நிலையில், 2022-2023-ம் ஆண்டில் ரூ.36,215 கோடியாக குறைந்துள்ளதாகவும், முந்தைய ஆண்டை விட 17% வருவாய் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் எனவும் கூறினார். அதேநேரம் போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் ரூ.21,980 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் கூறினார். தொழில் துறை, சேவை துறைகள் தமிழகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் கூறினார்.

இப்படியான சூழலில் தமிழகத்தின் சிஏஜி அறிக்கை பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ” நீதிமன்றம் கொடுத்த உத்தரவுப்படி சிஏஜி அமைப்புக்கு தமிழக அரசு உரிய ஆவணங்களை கொடுக்கவில்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் தமிழக அரசுக்கு எப்படி பணம் வருகிறது எப்படி பணம் செலவிடப்படுகிறது என தெரிய வேண்டும்.

ஆதலால், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போகிறோம். தமிழக நிதித்துறை அதாள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. எதோ சில துறைகளில் முன்னேற்றம் என்று கூறினால் மட்டும் போதாது. ஒரு இடத்தில் முன்னேற்றம் என்றால் மீதம் உள்ள 99 இடத்தில் சறுக்கல் தான். இதனை ஒவ்வொரு துறையாக வெளியிட வேண்டும். ” என அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...