இலங்கை அரசியல் வாதிகளை பார்த்து நலம் விசாரிப்பதற்க்காகவா அனைத்து கட்சி குழு

இலங்கைக்கு அனைத்து கட்சிகுழுவை அனுப்பும் மத்திய அரசின் முடிவில் இருக்கும் முரண்பாடுகள் பெருத்த சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது, இந்த குழுவில் இடம்பெற மாட்டோம்’ என்று , திடீரென அ.தி.மு.க.வும் பின்வாங்கியுள்ளது, மத்திய அரசின் சொதப்பலான செயல்பாடுகளால் இலங்கைக்கு, அனைத்து கட்சி குழுவை அனுப்பும் முடிவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை போருக்கு பின் , நிலவும் அரசியல் சூழ் நிலைகள் மற்றும் நிவாரணம் மக்களுக்கு சரியாக சென்றதா, போரில் பாதிக்கப்பட்டவரின் நிலை எப்படி உள்ளது என்பதை நேரில் அறிந்து வருவதற்காக அனைத்து கட்சி குழுவை அனுப்புவது என மத்திய அரசு அண்மையில் முடிவு எடுத்திருந்தது. அதன்படி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் தலைமையில், 15பேர் கொண்டகுழு செல்ல உள்ளது. முதலாவதாக, இந்தகுழு அமைக்கபட்டதிலேயே பல குழப்பங்கள் ஏற்ப்பட்டுள்ளது

பொதுவாக பாரதிய ஜனதா சார்பில், இலங்கை பிரச்னை குறித்து தெளிவாக புரிந்து வைத்திருப்பவர் வெங்கையா நாயுடு. அதேபோன்று இலங்கை விவகாரங்களுக்கு பாரதிய ஜனதா வில் பொறுப்பு வகிப்பவர் யஷ்வந்த் சின்கா.ஆனால் இவர்களுக்கு இடம் தராமல் பல்பீர்புஞ்ச் என்ற எம்.பி., செல்லவுள்ளார். மேலும் இலங்கை பிரச்னைகளை கையிலெடுத்து, தீவிரமாக குரல் எழுப்பும், தமிழக எம்பி.,க்களில் லோக்சபாவில் கணேசமூர்த்தியும் மற்றும் ராஜ்ய சபாவில் ராஜா போன்றவர்கள்தான். ஆனால் இவர்கள் குழுவில் இடம்பெறவில்லை.இலங்கை விவகாரத்தில் பொதுவாக வட மாநிலங்களை சேர்ந்த கட்சிகள் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை . ஆனால், அவர்களுக்கு எல்லாம் கூட வாய்ப்பு தரப்பட்டுள்ளது

முள்வேலி முகாம்களில் இருக்கும் தமிழர்களை சந்திப்பதோ, சிங்கள குடியேற்றம் பற்றியோ, தமிழர் பகுதிகளில் நடக்கும் திடீர்தாக்குதல்கள் பற்றியோ, அரசியல் தீர்வு காண்பது பற்றியோ, இந்த குழுவின் பயணத் திட்டத்தில் எதுவுமில்லை. இலங்கை அரசாங்கத்திற்கு சங்கடம் தரும் , எந்த ஒரு விஷயமும் இல்லாத வகையிலேயே பயணதிட்டம் தயாராகியுள்ளது. ஆகா மொத்தத்தில் இலங்கை அரசியல் வாதிகளை பார்த்து நலம் விசாரிப்பதற்கே இந்த காங்கிரஸ் அரசாங்கம் அனைத்து கட்சி குழுவை அனுப்புகிறதோ என்னவோ ?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...