மகாராஷ்டிரா ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்றுகட்சிகள் இணைந்து மகாவிகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்திவந்தது. எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென போர்க் கொடி தூக்கினார் சிவசேனா கட்சியின் மூத்ததலைவரான ஏக்நாத் ஷிண்டே. முதலில் பத்திற்கும் மேற்பட்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடன் குஜராத் மாநிலம் சூரத்தில் தங்கியிருந்த அவர், தனக்கானபலம் அதிகரிக்க அதிகரிக்க அசாம் மாநிலம் கவுகாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு இடம்பெயர்ந்தார். 9 அமைச்சர்கள் உட்பட 36 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத்ஷிண்டே விற்கு ஆதரவு வழங்கினர்.

வெறும் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்திற்கும் குறைவான அமைச்சர்கள் கொண்டு ஆட்சி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள சிவசேனாவின் தலைவரும் மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ்தாக்கரே தடுமாறி வருகிறார். தங்களது கூட்டணி தொடரும் என காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் தெரிவித்தநிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மீட்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். அமைச்சர்களுக்கான பதவிபறிப்பு உள்ளிட்டவை செய்தும் அது பலனளிக்கவில்லை

இதற்கிடையில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய அவர் எடுத்த முயற்சி உச்ச நீதிமன்றத்தால் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ள நிலையில் புதுவேகம் கொண்டுள்ள ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள்குறித்து யோசனை செய்துவருகிறார். இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் உடன் இணைந்து மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியைபிடிக்கும் முனைப்பில் உள்ளது.

இன்று பிற்பகல் அவசரமாக டெல்லிவிரைந்த மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பலருடன் ஆலோசனை நடத்திவருகிறார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் இணைவது அவர்களுக்கான மந்திரி பொறுப்புகள், ஏக்நாத் ஷிண்டேவிற்கான முக்கியப்பதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப் படுவதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும்மீண்டும் சொல்வது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்ததுதவறு என்பதுதான். எனவே அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகஇருப்பதாக சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...