அம்பேத்கரிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – கிரண் ரிஜிஜூ

”தன் பாவங்களுக்காக, அம்பேத்கரிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருபோதும் மரியாதை அளித்தது இல்லை,” என, பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டினார்.

நம் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

நம் நாட்டில் அனைவருக்கும் சமமான ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும், சிறுபான்மையினருக்கு உரிமை இல்லை என, ஒருசிலர் கூறுகின்றனர். நம் நாட்டில் சிறுபான்மையினர் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதில்லை.

சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களின் நலன்களை பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாக்., – ஆப்கானிஸ்தான் – வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது அனைவரும் அறிந்ததே.

நம் நாடு மிகவும் பாதுகாப்பானது என்பதால் தான், அவர்கள் நம் நாட்டில் தஞ்சம் அடைகின்றனர். அனைவருக்கும் ஏற்ற நாடாக நம் நாடு விளங்குகிறது. நிறைய பாவங்களை காங்., செய்துள்ளது. இதற்காக அக்கட்சி அம்பேத்கரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 1952 லோக்சபா தேர்தலில், காங்., வெளிப்படையாக அம்பேத்கரை தோல்வி அடையச் செய்தது.

பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த அக்கட்சி, அவருக்கு, ‘பாரத ரத்னா’ விருது வழங்க முன்வரவில்லை. பா.ஜ., ஆட்சி அமைந்தவுடன், அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. 20 ஆண்டுகளில் பட்டியல் ஜாதியினர் பற்றி நேரு ஒரு முறை கூட பேசவில்லை என, அம்பேத்கரே கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...