ராகுல் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்த்தோம் : மத்திய அமைச்சர் கருத்து

”பார்லிமென்டில் நடந்ததற்கு பத்திரிகையாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை,” என மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் கூறியுள்ளார்.

டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: பார்லிமென்டில் நடந்து கொண்டதற்காக பத்திரிகையாளர் சந்திப்பில் காங்., தலைவர் கார்கேயும், ராகுலும் மன்னிப்பு கேட்பார்கள் என நம்பினோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை.

தங்களது பிரச்னைகளை எழுப்ப ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. ஆனால், இன்று பார்லி., வளாகத்தில் பா.ஜ., எம்.பி.,க்கள் போராட்டம் நடத்திய போது, ராகுல் வேண்டும் என்றே அங்கு சென்றார். வேறு வழியில் செல்லும்படி பாதுகாவலர்கள் கூறிய போதும், அதனை மீறி சென்று பா.ஜ., எம்.பி.,க்களை தள்ளிவிடத் துவங்கினார்.

ராகுல் ரவுடியை போல் நடந்து கொண்டார். அவர் தள்ளியதால், பா.ஜ.,வின் மூத்த எம்.பி., கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு ஐசியூ.,வில் சிகிச்சை அளிக்கப்படுகிறது அவர் சுயநினைவின்றி உள்ளார். அவரது ஸ்கேன் அறிக்கையில் பிரச்னை இல்லை என தெரியவந்துள்ளது. பார்லிமென்ட் வளாகத்தில் உடல் பலத்தை பிரயோகிக்கலாமா

ஆதிவாசி எம்.பி., பங்னோன் கோன்யக், கூறியது மிகுந்த வேதனை அளிக்கிறது. தான் முறையற்ற வகையில் நடத்தப்பட்டதாக அவர் ராஜ்யசபா தலைவரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது கண்ணீருடன் மனு அளித்ததாக அவைத்தலைவர் கூறியுள்ளார். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...