பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை போக்குவோம் – பிரதமர் மோடி

“பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை போக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ம் தேதி, தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான ஏற்றத்தாழ்வுகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2008 முதல் மத்திய அரசு சார்பில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தேசிய பெண் குழந்தைகளின் தினத்தையொட்டி பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:

நம் நாட்டில் அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகள் சாதனை புரிவதன் வாயிலாக, இந்தியா பெருமை கொள்கிறது. பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளிக்கவும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உருவாக்கி தருவதிலும், மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

அவர்களின் சாதனைகள், நம் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளன.

கல்வி, தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக, பெண் குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்த, மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகளை போக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...