யமுனை நதி சீர்கெடுவதற்கு கெஜ்ரிவால் தான் காரணம் – அமித்ஷா குற்றச்சாட்டு

“யமுனை நதி சீர்கெடுவதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தான் காரணம்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.

ரோஹிணியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:

லண்டனில் உள்ள தேம்ஸ் நதியைப் போல யமுனையை சுத்தம் செய்வதாக ஆம் ஆத்மி அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்று மக்கள் கேட்கும் நிலையில், ஹரியானாவில் உள்ள பா.ஜ., அரசு ஆற்றில் விஷம் கலந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யாகக் குற்றஞ்சாட்டினார்.

ஹரியானா அரசுக்கு எதிரான கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு, கீழ்த்தரமான அரசியல். ஊழல் காரணமாக ஆம் ஆத்மி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் யமுனையை சுத்தம் செய்வதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று கெஜ்ரிவாலிடம் சொல்ல வந்துள்ளேன்.

கெஜ்ரிவால், நீங்கள் யமுனை நதியை மாசுபடுத்தி, அதன் தண்ணீரை குடிக்க மக்களை கட்டாயப்படுத்தினீர்கள். மேலும் நதியை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டிய அனைத்து பணத்தையும் ஆம் ஆத்மி கட்சியின் ஊழலுக்கு கொடுத்தீர்கள்.

சட்டசபைத் தேர்தலில் தோல்வியை உணர்ந்த பிறகு, கெஜ்ரிவால் இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். கெஜ்ரிவால், உங்களால் எதுவும் செய்ய முடியாவிட்டால், டில்லியை எவ்வாறு சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதை நாங்கள் காண்பிப்போம்.

ஆம் ஆத்மியின் 10 ஆண்டுகால ஆட்சியில் முழு டில்லியையும் அரவிந்த் கெஜ்ரிவால் குப்பைத் தொட்டியாக மாற்றினார்.

இவ்வாறு பேசிய அமித்ஷா, ஆம் ஆத்மி அரசின் தோல்விகளையும் ஊழல்களையும் பட்டியலிட்டு பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.