3-மடங்கு வேகத்தில் பாரதத்தின் முன்னேற்றம் – திரௌபதி முற்றுமோ பெருமிதம்

இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டம் இன்று ( ஜன.31) காலையில் துவங்கியது. பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். முன்னதாக அவரை குதிரைப்படை வீரர்கள் புடைசூழ வரவேற்று வந்தனர். பார்லி.,க்கு வந்த ஜனாதிபதியை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். ‘பாரதத்தின் பொருளாதாரம், டிஜிட்டல் துறை , விவசாயம், புதிய சீர்திருத்தம் என பல்வேறு துறைகளில் வளர்ச்சி மும்மடங்கு வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் வளர்ச்சி என்ற நோக்கில் இந்திய அரசு செயல்படுகிறது’ என தெரிவித்தார்.

உரையின் துவக்கத்தில் மஹா கும்பமேளாவில் உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார். மறைந்த பிரதமர் மன்மோகன்சிங் மறைவு பேரிழப்பு என ஜனாதிபதி புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து ஜனாதிபதி முர்மு உரையில் அவர் பேசியதாவது :

மத்திய அரசு விவசாயிகளின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளது. விவசாயிகளுக்கு இதுவரை நிதிக்காக ரூ.41 ஆயிரம் கோடி வழங்கி உள்ளோம். 70 வயதுக்கு மேற்பட்டோர் 6 கோடி பேர் ஆயுஷ்மான் திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர் .கோடிக்கணக்கான மக்களை ஏழ்மையில் இருந்து மீட்டுள்ளோம். இந்த ஆட்சியில் வக்பு வாரிய சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய சீர்திருத்த சட்டங்களை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத அளவிற்கு பாரதத்தின் வளர்ச்சி மும்மடங்கு வேகத்தில் உயர்ந்து வருகிறது. நடுத்தர மக்கள், பெண்களின் அதிகாரம், ஏழை மக்களின் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு சிறு வியாபாரிகளையும் அரவணைத்து வருகிறது. தொலைபேசி வாயிலாக ஆலோசனைகள் வழங்கியதன் மூலம் 30 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

முன்னதாக பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களிடம் பேசியதாவது : இந்த பட்ஜெட் கூட்டம் பயனுள்ளதாக அமையும், மத்திய அரசு வர்க்கத்தினருக்கு நன்மை பயக்கும். நல்ல படியாக அமைய அன்னை லட்சுமியை வணங்குகிறேன். ஏழைகளுக்கு செல்வங்கள் வழங்கிட வேண்டுகிறேன். அவரது ஆசி கிட்டும் என நம்புகிறேன். 2047 ல் நாடு வல்லரசாக மாறும் வகையில் பட்ஜெட் இருக்கும். மக்களின் மேம்பாட்டுக்காக நாள்தோறும் பாடுபட்டு வருகிறோம். அனைவருக்குமான திட்டங்கள், புதிய முன்னேற்றம், முதலீடு ஆகியவற்றை கொண்டதாக இந்த பட்ஜெட் அமையும். இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வழிதிட்டங்களுடன் இந்த பட்ஜெட் இருக்கும். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்பதை நோக்கமாக கொண்டு பயணிக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ் மொழியை வியாபாரமாக பயன்பட� ...

தமிழ் மொழியை வியாபாரமாக பயன்படுத்தும் திமுக தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தி.மு.க., ...

அமித்ஷாவுக்கு பாஜக தலைவர் நன்ற� ...

அமித்ஷாவுக்கு பாஜக தலைவர் நன்றி தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று முன்தினம் பா.ஜ., ...

140 கோடி மக்களின் நம்பிக்கை – பி� ...

140 கோடி மக்களின் நம்பிக்கை – பிரதமர் மோடி பெருமிதம் 'மஹா கும்பமேளா நிகழ்ச்சி நிறைவடைந்தது. 140 கோடி இந்தியர்கள் ...

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டத்தில் ...

தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஸ்டா ...

தொகுதி மறுசீரமைப்பு பற்றி  ஸ்டாலின் சொல்வது பொய் – அமித்ஷா குற்றச்சாட்டு 'லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் ...

2026-ல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப� ...

2026-ல் திமுகவை வீட்டுக்கு அனுப்புவது உறுதி – அண்ணாமலை 'தமிழகத்தில் நீங்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும், 2026ல் நீங்க ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.