ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தயாராக வேண்டும் – போடோ இளைஞர்களுக்கு அமித்ஷா அழைப்பு

வரும் 2036ல் இந்தியாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு போடோ சமூக இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.

வரும் 2036 ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அரசு விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அசாம் மாநிலம் கோக்ரஜாரில் டோட்மாவின் போடோபா புதாரில் நடைபெற்ற அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் 57வது ஆண்டு மாநாட்டின் நான்காவது மற்றும் கடைசி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:

சர்வதேச அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த போடோ இளைஞர்கள் முன்கூட்டியே தயாராக வேண்டியது அவசியம்.

ஆகவே,2036 ஒலிம்பிக்ஸ்க்கு போடோ இளைஞர்கள் தயாராக வேண்டும். இது விளையாட்டு மற்றும் உடல் திறனின் முக்கியத்துவம் சார்ந்தது.

இந்த அறிவுறுத்தல், 2036 கோடைகால ஒலிம்பிக்ஸ் நிகழ்வை இந்தியா நடத்தும் என்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற தலைவர்களின் பரந்த நோக்கத்தோடு தொடர்புடையது.

மாநிலத்தில் உள்ள போடோலாந்து போன்ற பகுதிகளின் இளைஞர்கள் உலகளாவிய அளவில் இந்தியாவின் விளையாட்டு சாதனைகளுக்கு பங்களிக்கும் திறன் மகத்தானது.

முக்கியமாக அசாமில் வாழும் போடோ சமூக மக்கள் நாட்டின், கலாசார மரபுகள் மற்றும் விளையாட்டுகளில் அதிகரித்து வரும் ஆர்வத்தை கொண்டுள்ளனர்.

இந்தியா ஒரு உலகளாவிய விளையாட்டு மாபெரும் சக்தியாக மாறுவதை நோக்கமாக கொண்டு, விளையாட்டு உள்கட்டமைப்பு, திறமை வளர்ச்சி மற்றும் தேசிய பெருமையை ஊக்குவிப்பதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது.

இந்தியா 2036 ஒலிம்பிக்ஸை வெற்றிகரமாக நடத்தினால் அது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமையும்,

35 லட்சம் மக்கள் வசிக்கும் போடோலாந்து பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உறுதிமொழி உள்ளது.

இதன்படி, 82 சதவீத பிரிவுகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 100 சதவீத செயல்படுத்தலை அடைவதற்கான உறுதிமொழி எடுத்துள்ளோம். இதற்காக, ரூ.1,500 கோடி ஒதுக்கி உள்ளோம்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...