ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தயாராக வேண்டும் – போடோ இளைஞர்களுக்கு அமித்ஷா அழைப்பு

வரும் 2036ல் இந்தியாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு போடோ சமூக இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.

வரும் 2036 ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அரசு விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அசாம் மாநிலம் கோக்ரஜாரில் டோட்மாவின் போடோபா புதாரில் நடைபெற்ற அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் 57வது ஆண்டு மாநாட்டின் நான்காவது மற்றும் கடைசி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:

சர்வதேச அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த போடோ இளைஞர்கள் முன்கூட்டியே தயாராக வேண்டியது அவசியம்.

ஆகவே,2036 ஒலிம்பிக்ஸ்க்கு போடோ இளைஞர்கள் தயாராக வேண்டும். இது விளையாட்டு மற்றும் உடல் திறனின் முக்கியத்துவம் சார்ந்தது.

இந்த அறிவுறுத்தல், 2036 கோடைகால ஒலிம்பிக்ஸ் நிகழ்வை இந்தியா நடத்தும் என்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற தலைவர்களின் பரந்த நோக்கத்தோடு தொடர்புடையது.

மாநிலத்தில் உள்ள போடோலாந்து போன்ற பகுதிகளின் இளைஞர்கள் உலகளாவிய அளவில் இந்தியாவின் விளையாட்டு சாதனைகளுக்கு பங்களிக்கும் திறன் மகத்தானது.

முக்கியமாக அசாமில் வாழும் போடோ சமூக மக்கள் நாட்டின், கலாசார மரபுகள் மற்றும் விளையாட்டுகளில் அதிகரித்து வரும் ஆர்வத்தை கொண்டுள்ளனர்.

இந்தியா ஒரு உலகளாவிய விளையாட்டு மாபெரும் சக்தியாக மாறுவதை நோக்கமாக கொண்டு, விளையாட்டு உள்கட்டமைப்பு, திறமை வளர்ச்சி மற்றும் தேசிய பெருமையை ஊக்குவிப்பதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது.

இந்தியா 2036 ஒலிம்பிக்ஸை வெற்றிகரமாக நடத்தினால் அது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமையும்,

35 லட்சம் மக்கள் வசிக்கும் போடோலாந்து பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உறுதிமொழி உள்ளது.

இதன்படி, 82 சதவீத பிரிவுகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 100 சதவீத செயல்படுத்தலை அடைவதற்கான உறுதிமொழி எடுத்துள்ளோம். இதற்காக, ரூ.1,500 கோடி ஒதுக்கி உள்ளோம்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...