இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை – பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக அதிகரித்து உள்ளது. இதற்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

பாதுகாப்புத்துறையில் வெளிநாடுகளை நம்பி இருந்த இந்தியா, அதனை மாற்றி தன்னிறைவு பெற செய்வது என இலக்கு நிர்ணயித்ததுடன், உள்நாட்டில் ஆயுதங்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்தது. இதன்படி ஏராளமான ஆயுதங்கள், தளவாடங்கள், அணு ஆயுதங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிதியாண்டில், வெடிமருந்துகள், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் சார்ந்த துணை அமைப்புகள் உள்ளிட்டவற்றை இந்த நிதியாண்டில் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

ஆயுத தளவாடங்கள் ஏற்றுமதி மற்றும் அதனை ஆய்வு செய்வதற்கு ஏன பாதுகாப்பு உற்பத்தித்துறை தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அதில் கடந்த 2024- 25ம் நிதியாண்டில், 1,762 விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் 16.92 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2024- 25ம் நிதியாண்டில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக அதிகரித்து உள்ளது. இது 2023 – 24ம் நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ.21,083 கோடியைக் காட்டிலும் 12 சதவீதம்(ரூ.2,539) கூடுதல் ஆகும்.இந்த சாதனையை நிகழ்த்திய அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

2029ம் ஆண்டிற்குள் பாதுகாப்பு ஏற்றுமதிக்கு ரூ.50 ஆயிரம் கோடி இலக்கு என்பதை நோக்கி பிரதமர் மோடி தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது.

இதற்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் உலகளாவிய தலைமைப்பண்பை நோக்கிய பயணத்தில் இது பெருமைமிக்க தருணம். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...