இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும்

”பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை வேட்டையாடினர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, பாதுகாப்பான இந்தியா தான் நமக்கு வேண்டும்,” என, காஷ்மீரில் கொல்லப்பட்ட கர்நாடக தொழிலதிபர் மஞ்சுநாத்தின் மனைவி பல்லவி கூறினார்.

காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர்; 20 பேர் காயமடைந்தனர். இதில் கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத் ராவ் என்பவரும் ஒருவர். இவரது மனைவி பல்லவி மற்றும் மகனுடன் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றார்.

பயங்கரவாதிகள் நடத்திய மனித வேட்டை குறித்து, பல்லவி கூறிய கருத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவரை கொன்றபோது, தங்களையும் கொன்று விடுங்கள் என பல்லவி மன்றாடினார். அப்போது பயங்கரவாதிகள், ‘உங்களை கொல்ல முடியாது. மோடியுடன் போய் சொல்’ என கொக்கரித்தனர்.

பிரதமர் மோடிக்கு பகிரங்க மிரட்டல் விடுப்பது தான், பயங்கரவாதிகள் நாட்டுக்கு சொல்ல வந்த சேதி. நாட்டின் பிரதமருக்கு எதிராக, அரசு நிர்வாகத்துக்கு எதிராக பயங்கரவாத குரல் ஓங்கி ஒலித்ததற்கு, சாட்சியான பல்லவி, ஏப்., 22ல் பஹல்காமில் நடந்த கோர கொலையை விவரிக்கிறார்.

பத்திரிகையாளர் ஆர்னாப் கோஸ்வாமிக்கு அவர் அளித்த பேட்டி: நாங்கள் மூன்று பேர் – நான், எனது கணவன், மகன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றோம். பஹல்காமில் இருக்கிறோம். பகல் 1.30 மணி என நினைக்கிறேன். திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அது ஒரு பயங்கரவாத தாக்குதல் என தெரியாது. அது ஒரு கெட்ட கனவு.

நாங்கள் நின்ற பகுதியில் திடீரென நான்கு பயங்கரவாதிகள் வந்தனர். என் கணவர் சுதாரித்து, எங்களை பார்த்து, ‘நீங்கள் இங்கிருந்து சென்றுவிடுங்கள்’ என கூறினார்.

அதற்குள் பயங்கரவாதிகள், என் கண் முன்னே கணவரை சுட்டுக்கொன்றனர். அப்போது நான், ‘என் கணவரை கொன்று விட்டீர்கள்… எங்களையும் கொன்று விடுங்கள்’ என்றேன். உடனே அங்கிருந்த ஒரு பயங்கரவாதி, ஹிந்தியில், ‘நஹின் மாரங்கே… தும் மோடி கோ ஜாகே போலோ (நான் உன்னை கொல்ல மாட்டேன். மோடியிடம் போய் சொல்)’ என்றார்.

பின்னர், பயங்கரவாதிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். அங்கிருந்த உள்ளூர் மக்கள் குதிரைகளுடன் வந்து காயமடைந்தவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர்.

எல்லா இடங்களும் நமது சொந்த ஊர் போல் கருதியிருந்தேன். ஆனால், பஹல்காமில் எந்த பயமுமின்றி பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர். அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடி வருகின்றனர்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதுகாப்பான இந்தியா தான் நமக்கு தேவை. நாம் இந்தியர்கள். இனி இந்திய மக்கள் அச்சப்பட கூடாது. பயங்கரவாதிகள் தான் பயந்து நடுங்க வேண்டும். இவ்வாறு, பல்லவி கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...