மதமாற்றம் ஒரு வன்முறை என்ற சித்தாந்தத்தை உலகமே ஏற்று கொண்டுள்ளது

ஹிந்து மதத்தை பல்வேறு ஆபத்துகளிலிருந்து காக்க பாடுபட்டுபவர் சுவாமி தயானந்த சரஸ்வதி என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; சுவாமி தயானந்த சரஸ்வதி சித்தாந்தங்களை காக்கவும், பாதுகாக்கவும்

பாடுபட்டுவருகிறார். நாட்டையும், சமுகத்தையும் ஆரம்பத்திலிருந்து காப்பதற்க்காக செயல்பட்டுவருகிறார். அவரை சந்தித்து பழகிய வாய்ப்பு கிடைத்தபிறகு, எனது சிந்தனையிலும், கோட்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது.

மதமாற்றத்தை ஒரு வன் முறை என கூறியவர். இந்த சித்தாந்தத்தை உலகமே ஏற்று கொண்டுள்ளது . பணம் தந்தோ , ஆசைகாட்டியோ மத மாற்றத்தினில் ஈடுபடுவது பாவ செயலாகும். ஒருவர் விருப்பத்தின் படி மதம் மாறுவது தவறில்லை.

2002ல் ஹிந்து தர்ம ஆச்சார்ய சபை உருவாக காரணமாக இருந்தவர். இந்துக்களுக்காக போராடவும், பாடுபடவும் ஒருஅமைப்பு உருவாவதற்கு காரணமானவர் . உலகில் யூதர்களிடம் மட்டும் தான் மத மாற்றம் இல்லை. அதேபோன்று ஹிந்துமதம், மத மாற்றத்தில் ஈடு படுவதில்லை. நமது பாரம் பரியத்தையும், மதத்தையும் இஸ்ரேலிய யூதகுருமார்கள் புரிந்துகொண்டார்கள். 2,000 ஆண்டுகளாக ஹிந்து மதத்தைபற்றி அவர்களுக்கு இருந்த தவறான எண்ணம் மாறியது. அதைதொடர்ந்தே இந்தோ-யூத ஒப்பந்தம் உருவானது .

இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு இஸ்ரேலுடன், இந்தியா பலதுறைகளில் இணைந்து பணியாற்றுகிறது. சனாதன தர்மத்தையும், அத்வைத_வேதாந்தத்தையும் சுவாமி தயானந்த சரஸ்வதி பரப்பிவருகிறார் என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...