இந்திய நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான ஒரு கொள்கை தேவை என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் “இந்திய நதிகளின் இன்றைய நிலை’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய ;
இந்தியாவில் இருக்கும் நதிகளின் நிலைமை மிகவும் மோசகமாக உள்ளது, முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால் இந்தியாவில் உள்ள நதிகளின் நிலைமை மிக மோசமடைந்து வருகிறது. நதிகளை முறையாக பாதுகாக்காமல் விடுவதால் , வெள்ள பெருக்கு போன்ற பேரிடர்கள் ஏற்பட காரணமாகிறது. மக்களின் குடிநீர் ஆதாரமான நதிநீர் இப்போது பல-இடங்களில் நச்சுநீராக மாறி வருகிறது.
குறுகிய கால நலனுக்காக மற்றும் ஒரு சிலரினுடைய பேராசைக்காக நதிகளை நாசமாக விடக்கூடாது. நதிகளில் மணல் அள்ளுவதை கட்டுப்பாட்டுத்த வேண்டும்.எனவே நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான கொள்கைகள் தேவை. நதிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடையே உணர்த்த வேண்டும்.
நதிகளை பாதுகாக்க ஜார்க்கண்ட் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.