உறக்கத்தின் முக்கியத்துவம்

 மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு இன்பமாகும். எனவே ஆழ்ந்த உறக்கத்தில் எழுப்பக்கூடாது.

தூக்கம் வராமல் இருக்கின்ற இரவுகள், துன்பம் நிறைந்த இரவுகலாகும். எனவே குறித்த நேரத்தில் உறங்குவது அவசியமாகும். உறங்கும்போது தலையணை இல்லாமல் படுத்துறங்க வேண்டும். முடியாதவர்கள் ஓர் அங்குலம் முதல் மூன்று அங்குலம் வரை உயரம் உள்ள தலையணையைப் பயன்படுத்தலாம். 'இலவம் பஞ்சில் துயில்' என்பது அறிவாற்றல் மிக்க ஔவையாரின் வாக்கு.

ஒரு நாளைக்கு இருதயத்தின் இயக்கத்தைக் கணக்கிட்டு, ஒரு நாளை மூன்றாகப் பிரித்து, எட்டு மணி நேரம் உழைப்பு, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் உறக்கம் என்பது அறிவாற்றல் மிக்க நம் முன்னோர்கள் கண்டுப்பிடிப்பாகும்.

உடலில் ஏற்பட்ட பல மாற்றங்களையும், நாடித்துடிப்பின் ஏற்ற இரக்கங்களின் செயல்பாடுகளையும் சமன்படுத்துவதுதான், ஆழ்ந்த உறக்கம், உடல் உழைப்பு, உணவு, மனநலம், வயது இவற்றைப் பொருத்து உறக்கம் அமைகின்றது.
இரவில் முறையாகத் தூக்கம் வராவிட்டால் பகலில் எதையும் முறையாகச் செய்ய முடியாது. கடுமையான உழைப்புக்குப் பின் உடலில் சக்தி குறைந்து அதற்கேற்றவாறு பலவீனமடைகிறது. அத்துடன், மூளைக்குச் செல்லும் சக்தியும் குறைகிறது.
வயதானவர்களுக்கு தூக்கம் மந்த நிலையில்தான் இருக்கும். ஆனால் தூக்கம் முறையாக இல்லாமை என்பது ஒரு நோயன்று. அது சில நோய்களுக்கான எச்சரிக்கையாகும். மனநோயின் ஆரம்ப அறிகுறிகளில் தூக்கமின்மை ஒன்றாகும். எந்த நோயின் ஆரம்பத்திலும் முதலில் துன்பப்படுவது தூக்கம்தான்.

பகல் உறக்கம் பலவித வியாதிகளுக்கும் அடிப்படையாக உள்ளது. எனவே, பகலில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பின் வாழ்க்கையில் உள்ளவர்கள் உடல்நிலை காரணமாகப் பகலில் சிறிது நேரம் உறங்கலாம்.

தூங்கும்போது ஆண்கள் இடக்கைப்புறம் பக்கவாட்டில் படுத்துறங்க
வேண்டும். இடக் கையைத் தலைக்கடியில் வைத்து, பக்கவாட்டில் கால்களை நீட்டி, வலக் கையை வலத் தொடையின் மீது வைத்துப் படுக்க வேண்டும்.

பெண்கள் வலக் கைப்புறம் பக்கவாட்டில் படுத்துறங்க வேண்டும். வலக் கையைத் தலைக்கடியில் வைத்து, பக்கவாட்டில் கால்களை நீட்டி இடக் கையை, இடத் தொடையின் மீது வைத்துப் படுக்க வேண்டும்.

நன்றி : வேலூர் மா.குணசேகரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...