புதுடில்லி: இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் 100 கி.மீ., வரை வந்து தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் கனவில் கூட நினைத்து பார்த்தருக்காது என்று பா.ஜ.,எம்.பி., சம்பித் பாத்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; பாகிஸ்தானுக்குள் நுழைந்து, பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது மிகச் சிறந்த சாதனையாகும். இதுதான் புதிய இந்தியா. அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு நாட்டை, அதன் சொந்த மண்ணுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
இருதரப்புகளிடையே போர் நிறுத்தத்திற்கு எந்த ஒப்பந்தமும் போடவில்லை. மாறாக, பேச்சுவார்த்தையின் பேரிலேயே தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை முன்னெடுத்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.
பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு பயத்தை மட்டும் கொடுக்கவில்லை, அந்நாட்டு பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்து விட்டார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம், பாகிஸ்தான் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இதுவரையில் யாரும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தொட்டு கூட பார்த்ததில்லை.
பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவால் அடையக்கூடிய தூரத்தில் உள்ளது. எங்கள் இலக்குகள் துல்லியமாக இருந்தன. பயங்கரவாதிகள் இருந்த இடங்களை மட்டுமே தாக்கப்பட்டுள்ளது.
இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் 100 கி.மீ., வரை வந்து தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் கனவில் கூட நினைத்து பார்த்திருக்காது, இவ்வாறு அவர் கூறினார்.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |