ஜனநாயக ரீதியிலான வங்கதேசத்திற்கு எப்போதும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்று வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று (பிப்ரவரி 12) தேர்தல் நடைபெற்றது.இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று மாலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், வங்கதேச தேசியவாதக் கட்சிக்கும், ஜமாஅத் – இ – இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) கூட்டணி 200க்கு மேற்பட்ட இடங்களில் கைப்பற்ற இருக்கிறது. இரு தொகுதிகளில் போட்டியிட்ட பிஎன்பி கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான் இரண்டிலும் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |