“ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும்” – மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல்

மதுரை மண்டேலா நகர் பகுதியில் நாளை பாரத பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெறும் திடலில் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சருடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், எஸ்பி வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.

அப்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பிரதமர் மோடி நாளை மதுரை வருகிறார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு பாரபட்சமாக நடக்கிறது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாதது அவமானம்.

திமுக அரசு தமிழக மக்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் இறையாண்மையும் கெடுத்துவிட்டது. ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும். புதிய அரசாங்கம், புதிய மக்கள் நலத்திட்டங்கள் NDA ஆட்சியில் நிச்சயம் வழங்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தில் தலைமை தாங்குகிறார்.

பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு நண்பர்கள் மற்றும் பழக்க வழக்கங்களை வைத்து கொள்வார்கள். அதேபோல் அவரும் வைத்துள்ளார். அதிமுக, பாஜக தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், இது ஒரு குடும்ப விஷயம். எங்களுக்குள் நடைபெறும் விஷயங்களை வெளியில் பேச முடியாது. இறுதி செய்த பின்பு கண்டிப்பாக சொல்வோம். ஈரான் போர் குறித்த கேள்விக்கு “இது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் தான் பதில் சொல்ல முடியும். என்னால் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...