பார்க்கும் பார்வையில் இருக்குது அழகு

 பார்க்கும் பார்வையில் இருக்குது அழகு பணக்காரனோ அல்லது ஏழையோ, எவராயினும் சரி; மனிதராய்ப் பிறந்த அனைவருக்குமே வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் வருவது சகஜமே. அரசனாக இருந்தாலும்கூட, இதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து தப்பிக்க இயலாது. விஜயநகர ராஜாவான கிருஷ்ண தேவராயருக்கும் இதுபோன்ற ஒரு நிலைமை ஒருநாள் ஏற்பட்டது!

இன்னிசையைக் கேட்டும், நர்த்தகிகள் ஆடலைக் கண்டும், அரசவை விதூஷகன் எவ்வளவோ வேடிக்கை காட்டியும்கூட அவரது மனப் பாரம் அன்று சற்றும் குறையவே இல்லை. அவர்கள் அனைவரும் பல வழிகளில் முயன்று பார்த்தும், அவரை மகிழ்ச்சியடையச் செய்ய முடியவில்லை. வேறு ஏதாவது கலை நிகழ்ச்சிகளைக் காணச் சொல்லி, சிலர் ஆலோசனை சொன்னார்கள். ராஜாங்க வேலைகளை சற்று ஒதுக்கிவிட்டு, வெளியில் எங்காவது சென்றுவரும்படி சிலர் அறிவுறுத்தினர். அவரைப் பீடித்திருக்கும் துர்த்தேவதைகளை விரட்ட ஒரு யாகம் செய்யலாமே எனச் சிலர் யோசனை கூறினர்.

இறுதியாக, தெனாலி ராமன் ஒரு யோசனை சொன்னான். "அரண்மனைக்கு வெளியே நான் சில வெகு அழகான மலர்களைப் பார்த்தேன், மஹாராஜா! நீங்கள் மட்டும் சம்மதம் தந்தால், நான் உங்களை அங்கே அழைத்துச் சென்று அவற்றை உங்களுக்குக் காட்டுவேன். அதனாலாவது உங்கள் மனக்கவலை குறைகிறதா எனப் பார்க்கலாமே' என அரசரைப் பார்த்துப் பணிவாகச் சொன்னான். சற்றே சலிப்புடன், வேண்டா வெறுப்பாக 'சரி, இதையும்தான் முயற்சி செய்து பார்ப்போமே' என தேவராயர் அதற்குச் சம்மதித்தார்.

மறுநாள் காலை, அரசரும், தெனாலி ராமனும் ஒரு ரதத்தில் ஏறி அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். நகரின் எல்லைப்புறத்தருகே சில சிறுவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சேற்றில் சில சிறுவர்கள் குதித்தனர்; சிலர் அதில் புரண்டு விழுந்து, எழுந்து ஆடிக் கொண்டிருந்தனர்; சிலர் சேற்றை ஒருவர் மீது ஒருவர் எறிந்து கும்மாளம் போட்டனர்; இன்னும் சில குழந்தைகள் அமைதியாக அமர்ந்து, சேற்றைக் குழைத்து, அவரவர்க்கு பிடித்தமான வடிவங்களைச் செய்துகொண்டிருந்தனர்.
.
இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ண தேவராயர் முகத்தில் கொஞ்சம்கொஞ்சமாக ஆனந்தம் மலரத் தொடங்கியது. ரதத்தை விட்டுக் கீழிறங்கி, அவர்களுடன் தாமும் கலந்து கொண்டார். அந்தச் சிறார்களுடன் சமமாக அமர்ந்துகொண்டு, தானும் சேற்றைக் குழைத்து, அழகழகான வடிவங்களைச் சமைத்து, அந்தக் குழந்தைகள் கைகளில் கொடுத்து மகிழ்ந்தார். அப்போதுதான் அவருக்கு 'அது' நினைவுக்கு வந்தது!
மலர்களைக் காட்டத்தானே தெனாலி ராமன் இங்கே என்னை அழைத்து வந்தான். ஆனால், இங்கேயோ ஒரு பூவைக் கூடக் காணோமே! குழப்பத்துடன் அவனைப் பார்த்து, எங்கே நீ காட்டுவதாகச் சொன்ன அழகிய மலர்கள்? இங்கே ஒண்ணுமே இல்லையே?' என்றார்.

"அரசே! இவ்வுலகைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், கள்ளமின்றி இப்படிச் சிரித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும், இந்தப் பச்சிளம் பாலகர்களைக் காட்டிலும் அழகான மலர்கள் இருக்க முடியுமா? எனக்கென்னவோ இவர்கள்தான் கடவுள் படைத்த மலர்களிலேயே மிகவும் அழகான மலர்களாகத் தோன்றுகிறது' எனத் தெனாலி ராமன் பதிலிறுத்தான்.

அதைக் கேட்ட தேவராயர், தெனாலி ராமன் கூற்றிலிருக்கும் உண்மையைப் புரிந்து கொண்டார். இனி, இதுபோல அடிக்கடி வெளியே வந்து, தனது கவலைகளை மறக்கவும் முடிவு செய்தார்.

நன்றி : Dr . சங்கர் குமார் வட கரோலினா USA

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வேலை வாய்ப்புத் திருவிழா – பி� ...

வேலை வாய்ப்புத் திருவிழா – பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட ...

பஹல்காம் தாக்குதல் குறித்து பி� ...

பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம் ராகுல்காந்தி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு ...

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங� ...

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை ...

ராகுல் காந்தி, கார்கேவால் தங்கள ...

ராகுல் காந்தி, கார்கேவால் தங்கள் கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லையா?- பாஜக எம்.பி. கேள்வி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு ...

இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் � ...

இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்துக்கள் – எச் ராஜா மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ...

திருமணத்தின் மூலம் இந்தியாவுக� ...

திருமணத்தின் மூலம் இந்தியாவுக்கு வந்த 5 லட்சம் பாகிஸ்தான் பெண்கள்: தீவிரவாதத்தின் புதுமுகம் ‘‘​பாகிஸ்​தானை சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள், திரு​மணத்​தின் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...