டீசல் விலை உயர்வால் வேளாண்மைத் துறை மேலும் பாதிக்கப்படும்

 டீசல் விலை உயர்வால் வேளாண்மைத் துறை மேலும் பாதிக்கப்படும் டீசல் மற்றும் சமையல் எரிவாயுக் கட்டணங்களின் கிடுகிடு உயர்வு அறிவிப்பு விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் எதிரான நடவடிக்கையாகும். ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருக்கும் வேளாண்மைத் துறை, டீசல் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்படும். நாடு முழுவதும் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையால்

லட்சக்கணக்கான விவசாயிகள் வயலுக்கு நீர்பாய்ச்ச டீசல் பம்புசெட்டுகளையே நம்பியுள்ளார்கள். இந்த ஐந்து ரூபாய் விலையுயர்வு என்பது முன்னுதாரணமில்லாதது. இந்த விலையுயர்வு டிராக்டர்கள் வாடகைக் கட்டணத்தையும் ஏற்றி, விவசாய மக்களுக்கு பெரும் சுமையையும் ஏற்படுத்திவிடும்

.  ஏற்கனவே வேளாண்மைத் தொழில் என்பது லாபமற்றதாக மாறிவருகிறது. ஏனெனில் வேளாண்மை இடுபொருட்களின் விலை ஏற்றத்தால் விவசாயத்தை விட்டு கிராமப்புற மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயரும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில் டீசல் விலையுயர்வு அறிவிப்பு, நாட்டின் வேளாண்மை சமூகத்தினரின் மீதான நேரடித் தாக்குதலாகும். இதனால் பொருட்களின் விலையுயர்வு மேலும் அதிகரிக்கும். போக்குவரத்துச் செலவுகள் மற்றும் கட்டணங்களின் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும். இது சாதாரண குடியானவனைக் கடுமையாகப் பாதிக்கும்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு சிலிண்டர்தான் கொடுக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவு கீழ்நடுத்தர மற்றும் நடுத்தர மக்களை நேரடியாகப் பாதிப்பதாகும். ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒரு சிலிண்டர் சராசரித் தேவையாக உள்ளது. ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் மேல் வாங்குபவருக்கு லெவிக் கட்டணமாக ஒரு சிலிண்டருக்கு 746 ரூபாய் விதித்திருப்பது குரூரமான நகைச்சுவையாகும். இது இந்நாட்டில் நடந்தேயிராத ஒன்றாகும். விலைவாசி உயர்வால் கடுமையாக மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற நடவடிக்கை இது.

காங்கிரஸ் மக்களுக்கு இப்படி வாக்குறுதி அளித்த்து. “காங்கிரஸின் கை சாமானிய மனிதனோடு இணைந்திருக்கும்”. இதை இனி இப்படி மாற்றுவதே பொருத்தமாக இருக்கும்: “காங்கிரஸின் கை சாமானிய மனிதனின் முதுகில் குத்தும்” விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களின் நலத்தை முன்னிட்டு டீசல் விலை உயர்வு மற்றும் சிலிண்டர்கள் கட்டுப்பாடு என்ற இரண்டு முடிவுகளையும் அரசு வாபஸ் பெற வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள், மக்களோடு நின்று கட்டண உயர்வை வாபஸ் பெறுவதற்கு வற்புறுத்துகிறார்களா அல்லது அதிகாரத்துக்காக்க் கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசின் முடிவுகளை ஆதரிக்கப் போகிறார்களா என்பதைக் கண்டுகொள்ளும் சோதனை இது. வெறுமனே வாய் வார்த்தையாக்க் கோரிக்கைகளை விடுத்து, முதலைக் கண்ணீர் வடிப்பது மட்டும் போதாது. மத்திய அரசின் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பாஜக தேசிய அளவில் போராட்டங்களை நடத்தும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...