கோட்டையை நோக்கி பேரணிக்கு தயாராகும் பாஜக

ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல்விலையில் லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் விலையில் லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைக்கப் படும் என, திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், பெட்ரோல் விலையில் மூன்று ரூபாய்மட்டும் குறைத்து விட்டு, சலுகை வழங்கியது போல பீற்றி கொண்டனர். டீசல்விலையில், ஒரு ரூபாய் கூட குறைக்காமல் மக்களை ஏமாற்றி விட்டனர்.இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு, பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை குறைத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதனால் மத்திய அரசின் கலா வரியை காட்டிலும், மாநில அரசின் மதிப்புகூட்டு வரி தான் அதிகம் என்றானது. ஆனாலும், மாநில அரசு வரியை குறைக்காதாம். மத்திய அரசு, மாநிலங்களுடன் பகிரும், அடிப்படையான கலால்வரியில், எந்த மாறுதலும் செய்யவில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை முழுமையாக மறைத்து விட்டு, தாங்கள் மட்டுமே உத்தமர்கள் போல் காட்டி கொள்ளும் திமுக அரசு, போலி வேடம் போடுகிறது.

மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்ற தமிழகபாஜக தலைவர் கே.அண்ணாமலை, இதை பின்பற்றி, தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையைகுறைக்கவேண்டும் என, வலியுறுத்தி இருந்தார். மேலும், 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், தலைமை செயலகத்தைநோக்கி பேரணி நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விதித்த, 72 மணி நேரகெடு, இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து, தமிழக பாஜக தலைமை போராட்டம் தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறது.

கெடு முடிந்த பின்னும் தமிழக அரசு, பெட்ரோல், டீசல்விலையை குறைக்காத பட்சத்தில், அறிவித்தபடியே கோட்டையை நோக்கி, பாஜக, பேரணிநடக்கும்; முற்றுகை போராட்டமும் நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகளை, தமிழக பாஜக தொடங்கி விட்டது. ஜூன் முதல் வாரத்தில், பிரம்மாண்டமாக கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.