மோடி பாகிஸ்தானை ஆள வேண்டும் அல்லாவிடம் வேண்டுகிறேன்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடிநிலவும் சூழலில் அந்நாட்டு இளைஞர் ஒருவர், ‛இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானை ஆளவேண்டும்’ என கடவுளிடம் கேட்பதாகவும், அவரால்மட்டுமே இங்குள்ள நிலைமையை சமாளிக்க முடியும் என்றும் கூறியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருகிறது. இதனால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப் பட்டுள்ளது. ஒருலிட்டர் பால் விலை ரூ.250க்கு விற்பதனையாகிறது. கோழிஇறைச்சி ஒருகிலோ ரூ.700 முதல் 800 வரை உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் வேதனை யடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபரான சனா அம்ஜத் என்பவர், ஒருஇளைஞரிடம், பாக்., பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அரசு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்கிறார். அப்போது அந்நபர் ஷெபாஷ் மீது சரமாரி குற்றச் சாட்டுகளை அடுக்கியதுடன், ‛இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானை ஆளவேண்டும்’ என கடவுளிடம் கேட்பதாகவும், அவரால் மட்டுமே இங்குள்ள நிலைமையை சமாளிக்க முடியும் என்றும் கூறுகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த யூடியூபரிடம் பாக்., இளைஞர் பேசியுள்ளதாவது: பாகிஸ்தானில் பிறக்கக்கூடாது என்று விரும்புகிறேன். பாகிஸ்தான் இந்தியா விலிருந்து பிரிக்கப்படாமல் இருக்க விரும்புகிறேன். அப்போதுதான் தக்காளியை கிலோ ரூ.20க்கும், கோழிக்கறியை கிலோ ரூ.150க்கும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50க்கும் வாங்குவோம். எங்களுக்கு ஒரு இஸ்லாமிய தேசம் கிடைத்தது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் இங்கு இஸ்லாத்தை நிறுவமுடியவில்லை. இந்திய பிரதமர் மோடி, நம்மை விட சிறந்தவர். அங்குள்ள மக்கள் மோடியை மதிக்கின்றனர், அவரை பின் தொடர்கின்றனர்.

எங்களுக்கு நரேந்திரமோடி கிடைத்தால், நவாஸ் ஷெரீப்போ, பெனசிரோ, இம்ரானோ, முஷரப்போ தேவைப்படாது. எங்களுக்கு தேவை நரேந்திரமோடி மட்டுமே. அவரால் மட்டுமே நாட்டில் நிலவும் மோசமான நிலைமையை சமாளிக்க முடியும். இந்தியா தற்போது உலக பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இருக்கிறது.

மோடியின் ஆட்சியின் கீழ் நான் வாழதயார். அவர் ஒரு சிறந்த மனிதர். இந்தியர்களுக்கு தக்காளி, சிக்கன் போன்றவை நியாயமான விலையில் கிடைக்கின்றன. மோடியை நமக்கு (பாகிஸ்தானியர்களுக்கு) கொடுத்து நம் நாட்டை ஆளவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு கண்ணீருடன் அவர் பேசியுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...