இந்திய முன்னாள் பிரதமர் ஐகே. குஜரால் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் காலமானார்

 இந்திய முன்னாள் பிரதமர்  ஐகே. குஜரால் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் காலமானார் இந்திய முன்னாள் பிரதமர் இந்தர் குமார் குஜரால் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93.

நுரையீரல் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐகே. குஜரால், தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில்

சிகிச்சைபெற்று வந்தார். குஜராலுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர்கள், கைவிரித்துவிட்ட நிலையில் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு அவரது உயிர்பிரிந்தது.

திறமையான அரசியல் வாதியாகத் திகழ்ந்து, அரசியலில் தனக்கென ஒருஇடத்தைப் பிடித்தவர் மறைந்து முன்னாள் பிரதமர் ஐகே. குஜரால். 1919ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி பிறந்த இந்தர் குமார் குஜரால், இந்தியாவின் 12வது பிரதமராக ஓராண்டு காலம் பதவி வகித்தவர்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 1942ஆம் ஆண்டு “இந்தியாவை விட்டு வெளியேறு” இயக்கப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறைச் சென்றவர் குஜரால். 1975ஆம் ஆண்டு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக குஜரால் பதவியேற்றார்.

இதற்கிடையே 1980ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குஜரால், ஜனதா தளக் கட்சியில் சேர்ந்தார். 1989ஆம் ஆண்டு பஞ்சாப் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரராகவும், அரசியல் வாதியாகவும், சிறந்த பிரதமராகவும் தனது பணியினை சிறப்பாக செயலாற்றியவர் ஐ.கே. குஜரால். இரண்டு முறை இந்தியாவின் அயலுறவுத் துறை அமைச்சராக இருந்து பல்வேறு அயல்நாட்டுடனான பிரச்னைகளை சுமூகமாக முடித்தவர்.

1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், எச்.டி. தேவேகௌடா அரசுக்கு அளித்த வந்த ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்ள முடிவு எடுத்த போது பிரதமர் பதவிக்கு ஐ.கே. குஜரால் தேர்வு செய்யப்பட்டார். சரியாக ஓராண்டுகள் குஜரால் பிரதமர் பதவியை வகித்தார். அந்த காலக்கட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை குஜரால் திறமையாக சமாளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...